திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). நேற்று (டிச.2) இவர் தனது நண்பர்களுடன் ஆரணி ஆற்றில் குளித்தார். பின்னர் வீடு திரும்பியபோது கால் தவறி சுபாஷ் அங்குள்ள சுழலில் சிக்கி உயிரிழந்தார்.
உடனே கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடலை தேடினர்.
இந்நிலையில் இன்று (டிச.3) காலை சுபாஷ் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்த நிலையில் பெண்குழந்தை கண்டெடுப்பு!