ETV Bharat / state

தொழிலாளி அடித்துக் கொலை - இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - Thiruvallur District News

திருவள்ளூர்: திருவேற்காட்டில் வாய் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இருவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
author img

By

Published : Nov 1, 2019, 11:17 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏசுகுமார்(28). இவர் திருவேற்காடு அடுத்த கோலடியில் உள்ள அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் சீர்காழியைச் சேர்ந்த சிலம்பரசன்(25), ரகு ஆனந்தன்(24) ஆகியோரும் வேலை செய்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த ஊழியர்களிடம் ஏசுகுமாரை பற்றி இருவரும் தவறாகப் பேசியுள்ளனர். இதையறிந்த ஏசுகுமார் இருவரிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், சாப்பிடச் சென்றவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஏசுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக் கண்டதும் சிலம்பரசனும், ரகு ஆனந்தனும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில் குற்றவாளிகள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இதையடுத்து இருவரையும் பிடிக்க நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து திருவேற்காடு காவல் துறையினர் சீர்காழியில் பதுங்கியிருந்த சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 38 ஆண்டு சிறை!

திருவள்ளூர் மாவட்டம் கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஏசுகுமார்(28). இவர் திருவேற்காடு அடுத்த கோலடியில் உள்ள அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் சீர்காழியைச் சேர்ந்த சிலம்பரசன்(25), ரகு ஆனந்தன்(24) ஆகியோரும் வேலை செய்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த ஊழியர்களிடம் ஏசுகுமாரை பற்றி இருவரும் தவறாகப் பேசியுள்ளனர். இதையறிந்த ஏசுகுமார் இருவரிடம் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், சாப்பிடச் சென்றவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஏசுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைக் கண்டதும் சிலம்பரசனும், ரகு ஆனந்தனும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில் குற்றவாளிகள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இதையடுத்து இருவரையும் பிடிக்க நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து திருவேற்காடு காவல் துறையினர் சீர்காழியில் பதுங்கியிருந்த சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிலம்பரசன், ரகு ஆனந்தன் ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 38 ஆண்டு சிறை!

Intro:திருவேற்காட்டில் வாய்த் தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை. பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு.




Body:கொடுங்கையூரை சேர்ந்தவர் ஏசுகுமார்(28),திருவேற்காடு அடுத்த கோலடியில் உள்ள அலுமினியம் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அங்கு உடன் வேலை செய்து வந்த சீர்காழியை சேர்ந்த சிலம்பரசன்(25), ரகு ஆனந்தன்(24), ஆகியோர் ஏசுகுமார் குறித்து அங்கிருந்தவர்களிடம் தவறாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஏசுகுமார் இதுகுறித்து கேட்டபோது மூன்று பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆனது. இந்த நிலையில் 30.12.2013 அன்று இரவு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக ஏசுகுமார் சென்றார் அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலம்பரசனும், ரகுஆனந்தும் சேர்ந்து கொண்டு ஏசுகுமார் தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்தவர்கள் அருகிலிருந்த கட்டையை எடுத்து ஏசுகுமாரை அடிக்க விரட்டிச் சென்றனர். இதனைக்கண்டதும் ஏசுகுமார் அங்கிருந்து தப்பி ஓடினார் அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியதில் ஏசுகுமார் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3ல் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.Conclusion:ஆனால் குற்றவாளிகள் இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்கள் இதையடுத்து
இருவருக்கும், நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து திருவேற்காடு போலீசார் சீர்காழியில் பதுங்கியிருந்த சிலம்பரசன், ரகுஆனந்தன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று
தீர்ப்பு வழங்கப்பட்டது இதில் சிலம்பரசன், ரகுஆனந்தன் ஆகியோர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ 5 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில்
அரசு தரப்பில் வக்கீல் அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.