ETV Bharat / state

அவசர ஊர்தி தாமதத்தால் பெண் உயிரிழப்பு! நடந்தது என்ன?

author img

By

Published : Nov 10, 2019, 4:43 PM IST

திருவள்ளூர்: 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் அரசு மருத்துவமனையிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Woman dies due to delay in arrival of ambulance at thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு நேற்று மதியம் அழைத்துச் செல்லப்பட்டார்.

108 அவசர ஊர்தி வருவதற்கு தாமதம் ஆனதால் பெண் உயிரிழப்பு

அங்கு மருத்துவர்கள் சரிவர மருத்துவம் பார்க்காமல் அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் செல்வியை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்போவதாகவும் அதற்காக அவசர ஊர்தி 108 வாகனத்தை அழைத்துள்ளதாகவும் அவருடைய மகள் அஸ்வினியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நான்கு மணி நேரம் ஆகியும் அவசர ஊர்தி வராததால் செல்வி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனால் தனது தாய் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமும் அவசர ஊர்தி முறையான நேரத்துக்கு வராததும் தான் காரணம் என அஸ்வினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:

வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பள்ளி மாணவி - போலீஸ் தீவிர விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு போதிய வசதிகள் இல்லாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு நேற்று மதியம் அழைத்துச் செல்லப்பட்டார்.

108 அவசர ஊர்தி வருவதற்கு தாமதம் ஆனதால் பெண் உயிரிழப்பு

அங்கு மருத்துவர்கள் சரிவர மருத்துவம் பார்க்காமல் அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் செல்வியை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்போவதாகவும் அதற்காக அவசர ஊர்தி 108 வாகனத்தை அழைத்துள்ளதாகவும் அவருடைய மகள் அஸ்வினியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நான்கு மணி நேரம் ஆகியும் அவசர ஊர்தி வராததால் செல்வி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனால் தனது தாய் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமும் அவசர ஊர்தி முறையான நேரத்துக்கு வராததும் தான் காரணம் என அஸ்வினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க:

வீட்டின் பின்புறம் இறந்து கிடந்த பள்ளி மாணவி - போலீஸ் தீவிர விசாரணை

Intro:108 அவசர ஊர்தி வருவதற்கு தாமதம் ஆனதால் பெண் உயிரிழப்பு
Body:108 அவசர ஊர்தி வருவதற்கு தாமதம் ஆனதால் பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் போதிய வசதிகள் மருத்துவமனையில் இல்லாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு இன்று மதியம் 12 மணியளவில் அழைத்து வரப்பட்டார் இங்கு மருத்துவர்கள் சரிவர மருத்துவம் பார்க்காமல் அலைகழித்தாகவும் மாலை நான்கு மணிக்கு வரை மருத்துவர்கள் தனது தாயை முறையான சிகிச்சை அளிக்கவில்லை என எனவும் சிகிச்சை அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதற்காக அவசர ஊர்தி 108 அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இந்தநிலையில் நான்கு மணி நேரம் ஆகியும் அவசர ஊர்தி வராததால் செல்வி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார் தனது தாய் இறப்பிற்கு காரணம் மருத்துவமனை அலட்சியமும் அவசர ஊர்தி முறையான நேரத்துக்கு வராததாலும் காரணம் என மகள் அஸ்வினி குற்றம்சாட்டினார் மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அவசர ஊர்திகள் சரியான நேரத்திற்கு வராததால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.