ETV Bharat / state

அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..!

author img

By

Published : Jun 25, 2019, 5:34 PM IST

திருவள்ளூர்: கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பட்டதைத் தொடர்ந்து, நகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர்ப் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இங்கு மது பிரியர்கள் மது அருந்துவதற்காக அருகில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தூக்கிட்டு கிணற்றுக்குள் தொங்கிய நிலையில இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் நகரக் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், நேரில் வந்து அழுகிய நிலையில் உள்ள சடலத்தை மீட்டனர். பின்னர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தகவலளித்து, சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர்ப் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இங்கு மது பிரியர்கள் மது அருந்துவதற்காக அருகில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தூக்கிட்டு கிணற்றுக்குள் தொங்கிய நிலையில இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் நகரக் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், நேரில் வந்து அழுகிய நிலையில் உள்ள சடலத்தை மீட்டனர். பின்னர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தகவலளித்து, சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு. நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை.


Body:திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. அங்கு மது பிரியர்கள் மதுவை வாங்கி கொண்டு அருந்துவதற்காக அருகில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது என உடனே சென்று கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கிட்டு கிணற்றுக்குள் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பெயரில் காவல்துறையினர் நேரில் வந்து அழுகிய நிலையில் உள்ள சடலத்தை எடுத்து திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் போலீசார் இதுகுறித்து கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.