ETV Bharat / state

மழை வெள்ளத்தால் ஆமை வேகத்தில் நகரும் வாகனங்கள்! - திருவள்ளூர் மழை

நிவர் புயல் இன்று காலை கரையை கடந்த நிலையில் திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

tiruvallur rainfall
tiruvallur rainfall
author img

By

Published : Nov 26, 2020, 1:52 PM IST

திருவள்ளூர்: நிவர் புயல் கரையைக் கடந்ததையடுத்து, மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருநின்றவூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிகமாக தாமரைப்பாக்கத்தில் 191 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

சுங்கச்சாவடியில் மழையால் சூழ்ந்த வெள்ளம்

இச்சூழலில், செங்குன்றம் அருகேயுள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.

திருவள்ளூர்: நிவர் புயல் கரையைக் கடந்ததையடுத்து, மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை விட்டுவிட்டு பெய்துவருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருநின்றவூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிகமாக தாமரைப்பாக்கத்தில் 191 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

சுங்கச்சாவடியில் மழையால் சூழ்ந்த வெள்ளம்

இச்சூழலில், செங்குன்றம் அருகேயுள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.