ETV Bharat / state

மது அருந்தியபோது தகராறு... பிரபல ரவுடி ’ரிஸ்க் பாஸ்கர்’ பலி!

author img

By

Published : Jul 10, 2021, 5:50 PM IST

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர், சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

thiruvallur-rowdy-murder-issue
thiruvallur-rowdy-murder-issue

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த புது கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் (35). இவர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு ரவுடி ரிஸ்க் பாஸ்கர் தனது நண்பர்களான ஜெகன் (26), கார்த்திக் (25), பிரேம் குமார் (32), வினோத் (26) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி பாஸ்கரை சரமாரியாக அனைவரும் வெட்டியுள்ளனர்.

சிகிச்சைப் பலனின்றி பலி

இதில் பலத்த காயமடைந்த ரவுடி ரிஸ்க் பாஸ்கர், சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (ஜூலை.10) உயிரிழந்தார்.

நான்கு பேர் கைது

ஜெகன், கார்த்திக், பிரேம் குமார், வினோத் ஆகிய நான்கு பேரை கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 ஆண்டு கால தேடல்... மகனை பெற்றோருடன் இணைத்த ஆதார் கார்டு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியை அடுத்த புது கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் (35). இவர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு ரவுடி ரிஸ்க் பாஸ்கர் தனது நண்பர்களான ஜெகன் (26), கார்த்திக் (25), பிரேம் குமார் (32), வினோத் (26) ஆகியோருடன் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரவுடி பாஸ்கரை சரமாரியாக அனைவரும் வெட்டியுள்ளனர்.

சிகிச்சைப் பலனின்றி பலி

இதில் பலத்த காயமடைந்த ரவுடி ரிஸ்க் பாஸ்கர், சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று (ஜூலை.10) உயிரிழந்தார்.

நான்கு பேர் கைது

ஜெகன், கார்த்திக், பிரேம் குமார், வினோத் ஆகிய நான்கு பேரை கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 10 ஆண்டு கால தேடல்... மகனை பெற்றோருடன் இணைத்த ஆதார் கார்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.