ETV Bharat / state

வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம்: சிசிடிவி காட்சி வெளியீடு!

author img

By

Published : Aug 4, 2020, 4:57 PM IST

திருவள்ளூர்: வாடகை பிரச்னை தொடர்பான புகாரை விசாரிக்கச் சென்ற காவலர், தாக்கியதில் மனமுடைந்து பெயின்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தீக்குளிக்கும் சிசிடிவி காட்சி  திருவள்ளூர் மாவட்டச் செய்திகள்  வாடகை பிரச்னை தீக்குளிப்பு  திருவள்ளூர் பெயிண்டர் தற்கொலை  thiruvallur district news
வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம் சிசிடிவி காட்சி வெளியீடு

திருவள்ளூர் மாவட்டம், புழல் அருகே வீட்டு வாடகை விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார் கூறிய நபர் தீக்குளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயின்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

பல மாதங்களாக வாடகை தராமல் இருந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்க காவல் நிலையத்தில், வீட்டின் உரிமையாளர் புகார் அளித்தார். இந்தப்புகாரின் அடிப்படையில் விசாரணைக்குச் சென்ற காவலர் பென்சாம், சீனிவாசனை தாக்கியுள்ளார்.

பெயின்டர் தீக்குளித்த சிசிடிவி காட்சி

இதில் மனஉளைச்சல் அடைந்த சீனிவாசன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பென்சாம், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச்சூழ்நிலையில், சீனிவாசன் தீக்குளித்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொலி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரோட்டில் சரக்கு ரயிலைக் கவிழ்க்க சதி - காவலர்கள் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், புழல் அருகே வீட்டு வாடகை விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார் கூறிய நபர் தீக்குளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயின்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

பல மாதங்களாக வாடகை தராமல் இருந்துள்ளார். இதனால், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்க காவல் நிலையத்தில், வீட்டின் உரிமையாளர் புகார் அளித்தார். இந்தப்புகாரின் அடிப்படையில் விசாரணைக்குச் சென்ற காவலர் பென்சாம், சீனிவாசனை தாக்கியுள்ளார்.

பெயின்டர் தீக்குளித்த சிசிடிவி காட்சி

இதில் மனஉளைச்சல் அடைந்த சீனிவாசன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக பென்சாம், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச்சூழ்நிலையில், சீனிவாசன் தீக்குளித்தது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொலி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரோட்டில் சரக்கு ரயிலைக் கவிழ்க்க சதி - காவலர்கள் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.