ETV Bharat / state

தேர்தல் அலுவலரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது...! - thiruvallur Admk Party Member Aressted

திருவள்ளூர்: ஆவடி அருகே தேர்தல் பெண் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டிய அதிமுக பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Admk Party Member Aressted
Admk Party Member Aressted
author img

By

Published : Dec 27, 2019, 7:28 AM IST

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கண்ணபாளையம் ஊராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் சுவர்களில் உள்ள சுவரொட்டிகளை அழிக்கும் பணியில் அப்பகுதி தேர்தல் அலுவலர் யோகலட்சுமி ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதிமுக கண்ணபாளையம் ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் என்பவர், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து ஆவடி காவல்துறையினருக்கு யோகலட்சுமி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட ஆறுமுகத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கண்ணபாளையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் கண்ணபாளையம் ஊராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் சுவர்களில் உள்ள சுவரொட்டிகளை அழிக்கும் பணியில் அப்பகுதி தேர்தல் அலுவலர் யோகலட்சுமி ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதிமுக கண்ணபாளையம் ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் என்பவர், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து ஆவடி காவல்துறையினருக்கு யோகலட்சுமி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட ஆறுமுகத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கண்ணபாளையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் நிலையம்

இதையும் படிங்க:

பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

Intro:ஆவடி அருகே அரசு தேர்தல் பெண் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் போசியதோடு அவரை  தாக்கிய அதிமுக பிரமுகர் கைது.Body:ஆவடி அருகே அரசு தேர்தல் பெண் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் போசியதோடு அவரை  தாக்கிய அதிமுக பிரமுகர் கைது.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியம் கண்ணபாளையம்  ஊராட்சியில்  நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் உள்ள போஸ்டர்கள் மற்றும் சின்னங்களை அழிக்கும் பணியில் அப்பகுதி   தேர்தல் அதிகாரி யோகலட்சுமி என்பவர் ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆதிமுக கண்ணன்ப்பாளைய ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் என்பவர் அவரையும் அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகின்றது .இது குறித்த தகவல்  ஆவடி காவல்துறையினருக்கு அளித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து தகராறில் ஈடுபட்ட ஆறுமுகத்தை கைது செய்து குண்டுகட்டாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின்னர் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் அவர்களை தாக்கியது உள்ளிட்ட வழக்கு பதிவு செய்தனர்.

கண்ணபாளையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய அதிமுக கட்சியின் கண்ணன்ப்பாளைய ஊராட்சி செயலாளரை  போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.