திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, பல கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாபர் மசூதி இடத்தை திரும்ப வழங்க வேண்டும், மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முழங்கிய எஸ்டிபிஐ சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இம்மாதிரியான போராட்டங்களுக்கு தடைவிதித்திருந்த நிலையில், அதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் சையத் அகமது தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்புக்கு எதிராக ஏழு மறு சீராய்வு மனு!