ETV Bharat / state

பள்ளத்தில் சிக்கிய கார்... கதறிய போலீஸ்அதிகாரியின் மகள்... மாட்டிக்கொண்ட ஸ்கூல் பாய்ஸ்

author img

By

Published : Jan 22, 2020, 7:20 AM IST

Updated : Jan 22, 2020, 12:31 PM IST

திருவள்ளூர்: ஒரு தலையாக காதலித்த கல்லூரி மாணவியை கடத்த முயன்ற இளைஞரையும் அவருக்கு உதவிய இரண்டு பள்ளி மாணவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

School boys arrested for kidnapping college girl in trl
கல்லூரி மாணவியை கடத்திய பள்ளி மாணவர்கள் கைது

திருவள்ளூரை அடுத்துள்ள மாங்காடு கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் சிக்கி நின்றது. அப்போது அதிலிருந்து அலறல் சத்தம் கேட்க அங்கிருந்த பொதுமக்கள் காரின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது அந்த காருக்குள்ளே ஒரு இளம்பெண்ணும் மூன்று இளைஞர்களும் இருந்துள்ளனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த இளம்பெண் கதறியபடி இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அந்த இளைஞர்களை சரமாரியாகத் தாக்கி, அந்த இளம் பெண்ணை மீட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் விசாரணை செய்ய காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

கல்லூரி மாணவியை கடத்திய பள்ளி மாணவர்கள் கைது

விசாரணையின் போது கடத்தல் சம்பவத்தில் பிடிபட்ட நபர் மதனந்தபுரத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் என்பதும், அவர் கல்லூரியில் தன்னுடன் படித்த, உளவுப்பிரிவு பெண் அதிகாரியின் மகளும் மாணவியுமான கடத்தப்பட்ட பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அந்த இளைஞரின் காதலை அப்பெண் ஏற்க மறுத்ததால், அந்தப் பெண்ணைக் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார், அந்த 18 வயது நிரம்பிய இளைஞர்.

பின்னர் தனது நண்பர்களான 11ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களை கூட்டுச் சேர்த்து கடத்தல் சம்பவத்தில், 18 வயது அக்கல்லூரி மாணவர் ஈடுபட்டுள்ளார். கல்லூரி மாணவியை கடத்திக்கொண்டு சென்றபோது அவர்கள் சென்ற கார் பள்ளத்தில் சிக்கியதாலேயே மூவரும் மாட்டிக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் விசாரணைக்குப் பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவரை சென்னை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க : பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேசவேண்டும் - மு.க. ஸ்டாலின்

திருவள்ளூரை அடுத்துள்ள மாங்காடு கெருகம்பாக்கம் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையோர பள்ளத்தில் சிக்கி நின்றது. அப்போது அதிலிருந்து அலறல் சத்தம் கேட்க அங்கிருந்த பொதுமக்கள் காரின் அருகே சென்று பார்த்தனர்.

அப்போது அந்த காருக்குள்ளே ஒரு இளம்பெண்ணும் மூன்று இளைஞர்களும் இருந்துள்ளனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த இளம்பெண் கதறியபடி இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அந்த இளைஞர்களை சரமாரியாகத் தாக்கி, அந்த இளம் பெண்ணை மீட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் விசாரணை செய்ய காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

கல்லூரி மாணவியை கடத்திய பள்ளி மாணவர்கள் கைது

விசாரணையின் போது கடத்தல் சம்பவத்தில் பிடிபட்ட நபர் மதனந்தபுரத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் என்பதும், அவர் கல்லூரியில் தன்னுடன் படித்த, உளவுப்பிரிவு பெண் அதிகாரியின் மகளும் மாணவியுமான கடத்தப்பட்ட பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் அந்த இளைஞரின் காதலை அப்பெண் ஏற்க மறுத்ததால், அந்தப் பெண்ணைக் கடத்தி, கட்டாயத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார், அந்த 18 வயது நிரம்பிய இளைஞர்.

பின்னர் தனது நண்பர்களான 11ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களை கூட்டுச் சேர்த்து கடத்தல் சம்பவத்தில், 18 வயது அக்கல்லூரி மாணவர் ஈடுபட்டுள்ளார். கல்லூரி மாணவியை கடத்திக்கொண்டு சென்றபோது அவர்கள் சென்ற கார் பள்ளத்தில் சிக்கியதாலேயே மூவரும் மாட்டிக் கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இருவர் விசாரணைக்குப் பின்னர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவரை சென்னை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க : பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேசவேண்டும் - மு.க. ஸ்டாலின்

Intro:சென்னை அருகே காதலித்த பெண்ணை காரில் கடத்திய மூன்று சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படத்தை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேகமாக சென்ற கார் ஒன்று சிக்கியது.அந்த காரில் இருந்து இளம்பெண் அலறும் சத்தம் கேட்டது. இதனைக்கண்டதும் அந்த வழியே சென்ற பொதுமக்கள் அந்த காரின் அருகே சென்று பார்த்தபோது காருக்குள் 3 வாலிபர்கள் இருந்தனர். அந்த இளம்பெண்ணும் கதறியபடி காருக்குள் இருந்தார். இதனைக்கண்டதும் பொதுமக்கள் அந்த வாலிபர்களையும் சரமாரியாக தாக்கி அந்த இளம் பெண்ணை மீட்டனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளம்பெண்ணை மீட்டு அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து போலீஸ் அழைத்து சென்று விசாரணை செய்தனர். Conclusion:இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது இதில் பிடிபட்ட நபர் மதனந்தபுரத்தை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவர் என்பதும் பள்ளி நாட்களில் இருந்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். தற்போது அந்த பெண் காதலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து 11 ம் வகுப்பு படிக்கும் தனது நண்பர்களான இரண்டு பேரை காரில் அழைத்து கொண்டு கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அந்த மாணவியை காரில் கடத்தி சென்றபோது கார் பள்ளத்தில் சிக்கியதால் மாட்டி கொண்டது தெரியவந்தது. கடத்தப்பட்ட பெண் மத்திய உளவு பிரிவு இன்ஸ்பெக்டரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மாங்காட்டில் காதலியை பள்ளி மாணவர்கள் உதவியுடன் காரில் கடத்தி மூன்று பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Last Updated : Jan 22, 2020, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.