ETV Bharat / state

விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி

author img

By

Published : May 10, 2023, 9:40 AM IST

திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதல் கட்டமாக தலா ரூ.11 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தினருக்கு பணி ஆணையையும் தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.

விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி
விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி
தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1ஆம் தேதியான தொழிலாளர் தினத்தில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மைப் பணியாளர்கள் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று (மே 9) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர துய்மைப் பணியாளர் கோவிந்தராஜ் குடும்பத்திற்கு நிவாரணமான 36 லட்சம் ரூபாயில், தற்போது முதற்கட்டமாக 11 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், அவருடைய மகன் கார்த்திகேயனுக்கு ஆரணி பேரூராட்சியில் வரி தண்டலராகவும் பணி ஆணை வழங்கப்பட்டது.

அதேபோல் உயிரிழந்த சுப்பராயலுவின் குடும்பத்திற்கு நிவாரணமான 32 லட்சம் ரூபாயில் தற்போது முதற்கட்டமாக 11 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், அவருடைய மகன் மகேஷுக்கு மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராகவும் பணி நியமன ஆணையை தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன், “தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் ஜாமீனில் வெளி வராத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலரை கைது செய்ய கூறி இருக்கிறோம்.

இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். தனிப்பட்ட ஆளாக தூய்மைப் பணியாளரை தொடர்பு கொண்டு அழைக்கக் கூடாது.

சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆணையர்களை தொடர்பு கொண்டு, கழிவு நீர்களை அகற்றுவது தொடர்பாக பேச வேண்டும். மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கோ, அகற்றுவதற்கு இயந்திரம் கொண்டு வந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுக்கலாம். இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் 2013 மறுவாழ்வுச் சட்டத்தின் படி இயந்திரங்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிமுறை விதித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற ஆணையப்படி இயந்திரம் மூலம் எடுக்க முடியாத கழிவுகளை, விஷவாயு உள்ள கழிவு நீர்களில் ரசாயன பவுடர்கள் தெளித்து, பின்னர் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த பணி வழங்குவதை ஒழித்து, நிரந்தர பணி வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் அலுவலகத்தை, மாநில அளவிலும் அலுவலகம் உருவாக்க ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்திருக்கிறோம். அது தொடர்பாக விரைவில் முதலமைச்சரை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளேன்” என கூறினார்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1ஆம் தேதியான தொழிலாளர் தினத்தில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் இறங்கிய தூய்மைப் பணியாளர்கள் கோவிந்தன் மற்றும் சுப்புராயலு ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று (மே 9) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து, மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர துய்மைப் பணியாளர் கோவிந்தராஜ் குடும்பத்திற்கு நிவாரணமான 36 லட்சம் ரூபாயில், தற்போது முதற்கட்டமாக 11 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், அவருடைய மகன் கார்த்திகேயனுக்கு ஆரணி பேரூராட்சியில் வரி தண்டலராகவும் பணி ஆணை வழங்கப்பட்டது.

அதேபோல் உயிரிழந்த சுப்பராயலுவின் குடும்பத்திற்கு நிவாரணமான 32 லட்சம் ரூபாயில் தற்போது முதற்கட்டமாக 11 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், அவருடைய மகன் மகேஷுக்கு மீஞ்சூர் பேரூராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளராகவும் பணி நியமன ஆணையை தேசிய தூய்மை பணி ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன், “தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் ஜாமீனில் வெளி வராத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உடனே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலரை கைது செய்ய கூறி இருக்கிறோம்.

இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களின் நிர்வாகிகளை அழைத்து விழிப்புணர்வு நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். தனிப்பட்ட ஆளாக தூய்மைப் பணியாளரை தொடர்பு கொண்டு அழைக்கக் கூடாது.

சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆணையர்களை தொடர்பு கொண்டு, கழிவு நீர்களை அகற்றுவது தொடர்பாக பேச வேண்டும். மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கோ, அகற்றுவதற்கு இயந்திரம் கொண்டு வந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுக்கலாம். இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் 2013 மறுவாழ்வுச் சட்டத்தின் படி இயந்திரங்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிமுறை விதித்திருக்கிறது. உச்ச நீதிமன்ற ஆணையப்படி இயந்திரம் மூலம் எடுக்க முடியாத கழிவுகளை, விஷவாயு உள்ள கழிவு நீர்களில் ரசாயன பவுடர்கள் தெளித்து, பின்னர் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்து சுத்தப்படுத்த வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த பணி வழங்குவதை ஒழித்து, நிரந்தர பணி வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்துள்ளேன். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் அலுவலகத்தை, மாநில அளவிலும் அலுவலகம் உருவாக்க ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்திருக்கிறோம். அது தொடர்பாக விரைவில் முதலமைச்சரை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளேன்” என கூறினார்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.