திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள உத்திரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (60). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு வந்த ஐந்து வயது சிறுமியை பிஸ்கட் தருவதாகக் கூறி தனது கடைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
அச்சிறுமி அழுதுகொண்டு நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து ராமதாஸ் மீது கவரபட்டை காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை காவல் துறையினர் ராமதாசை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்