ETV Bharat / state

புழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை

author img

By

Published : May 27, 2020, 6:01 PM IST

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பழனி என்பவர் புழல் மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புழல் மத்திய சிறை
புழல் மத்திய சிறை

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த பழனி என்பவர், மன உளைச்சலில் இருந்து வந்தார். மன உளைச்சல் மேலும் அதிகமான நிலையில், சிறை மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.

இந்நிலையில், இன்று புழல் மத்திய சிறை கழிவறைக்கு பின்புறமுள்ள ஜன்னலில், பெட்ஷீட்டை கயிறு போல் பிரித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்த சக கைதிகள், சிறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து செயல்பட்ட சிறை காவலர்கள் பழனியை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புழல் சிறையில் தண்டனை கைது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சமூக பரவலாக மாறியுள்ளதா கரோனா?

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவில் அடைக்கப்பட்டிருந்த பழனி என்பவர், மன உளைச்சலில் இருந்து வந்தார். மன உளைச்சல் மேலும் அதிகமான நிலையில், சிறை மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.

இந்நிலையில், இன்று புழல் மத்திய சிறை கழிவறைக்கு பின்புறமுள்ள ஜன்னலில், பெட்ஷீட்டை கயிறு போல் பிரித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்த சக கைதிகள், சிறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து செயல்பட்ட சிறை காவலர்கள் பழனியை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புழல் சிறையில் தண்டனை கைது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சமூக பரவலாக மாறியுள்ளதா கரோனா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.