ETV Bharat / state

கரோனா தடுப்பு பணி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம்! - அலுவலர்கள் ஆய்வு கூட்டம்

திருவள்ளூர்: மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கரோனா தடுப்பு பணி அலுவலர்கள் ஆய்வு கூட்டம்!
கரோனா தடுப்பு பணி அலுவலர்கள் ஆய்வு கூட்டம்!
author img

By

Published : May 22, 2020, 6:59 PM IST

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்பார்வையிடும் கண்காணிப்பு அலுவலர், நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர் கே. பாஸ்கரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், வெளிநபர்கள் அந்த பகுதியின் உள்ளே வராத வண்ணம் முழுவதும் அடைக்கப்பட்டு காண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடைகள் திறக்கக் கூடாது என்றும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வைரஸ் தொற்று பகுதியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூர் தலைமை மருத்துவமனையை சுற்றிலும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் 107 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்பார்வையிடும் கண்காணிப்பு அலுவலர், நகராட்சி நிர்வாக ஆணையர் முனைவர் கே. பாஸ்கரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களை சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், வெளிநபர்கள் அந்த பகுதியின் உள்ளே வராத வண்ணம் முழுவதும் அடைக்கப்பட்டு காண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடைகள் திறக்கக் கூடாது என்றும், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வைரஸ் தொற்று பகுதியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. திருவள்ளூர் தலைமை மருத்துவமனையை சுற்றிலும் தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் 107 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.