ETV Bharat / state

திருவள்ளூரில் நான்கு வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை..! - tiruvallur Masked robbers

திருவள்ளூர்: பொன்னேரி பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 52 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய வீடுகள்
author img

By

Published : Nov 22, 2019, 5:32 PM IST


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தசரத நகர் கொக்கு மேடு பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் திருடிச் செல்வது அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் கமலம்மா என்பவரது வீட்டில் ரூ. 50 ஆயிரம், புஷ்பா என்பவரது வீட்டில் ரூ. 2000 ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய வீடுகள்

மேலும், கொக்கு மேடு பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி முகமூடி கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலை கேட்டுச்சென்று நோட்டமிட்டு கொள்ளையடித்த தாய், மகன் கைது


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தசரத நகர் கொக்கு மேடு பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் திருடிச் செல்வது அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியில் கமலம்மா என்பவரது வீட்டில் ரூ. 50 ஆயிரம், புஷ்பா என்பவரது வீட்டில் ரூ. 2000 ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய வீடுகள்

மேலும், கொக்கு மேடு பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி முகமூடி கொள்ளையர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலை கேட்டுச்சென்று நோட்டமிட்டு கொள்ளையடித்த தாய், மகன் கைது

Intro:திருவள்ளூர்


பொன்னேரி பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அடுததடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்த கும்பல் 52,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது


Body:திருவள்ளூர்


பொன்னேரி பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் அடுததடுத்து நான்கு வீடுகளின் பூட்டை உடைத்த கும்பல் 52,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தசரத நகர் கொக்கு மேடு பகுதிகளில் முகமூடி அணிந்துவந்த கொள்ளை கும்பல்
வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே கைகளில் இரும்பு கம்பி ஆயுதங்கள் கொண்டு வந்தும் உடலில் எண்ணெய் போன்று தடவி
பொதுமக்கள் தூங்கியபின் வீட்டின் பூட்டை உடைத்து தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது இந்த நிலையில் கொக்கு மேடு பகுதியில் கமலம்மா என்பவரது வீட்டில் 50 ஆயிரம் பணம் மற்றும் புஷ்பா என்பவரது வீட்டில் 2000 ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பி ஓட்டம் பிடித்தது வழக்கறிஞர்கள் காளமேகம் மற்றும் பரமேஸ்வரன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சப்தம் கேட்டு விழித்து கூச்சல் எழுப்பியதால் கும்பல்
தப்பி ஓடியது இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு தப்பியோடி முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர் தொடர்ந்து இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவர்களை கைது செய்து பொது மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.