ETV Bharat / state

தைல மர காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி... ட்ரோனை பார்த்து தெறித்து ஓட்டம்!

author img

By

Published : Apr 24, 2020, 2:25 PM IST

Updated : Apr 24, 2020, 5:42 PM IST

திருவள்ளூர்: ஊரடங்கில் சுற்றித்திரிபவர்களை காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்தபோது, தைல மர காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

dsd
sdsds

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வெளியே வருபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினர் கையில் எடுத்துள்ள புதிய ஆயுதம் தான் ட்ரோன் எனும் கழுகுப் பார்வை கேமரா. மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து பாய்ந்து மக்களைத் துரத்தி வீட்டுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும் காவல் துறையின் ட்ரோன் பார்வையில், கிரிக்கெட், கேரம் முடிந்து தற்போது காதல் விளையாட்டும் சிக்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏரிக்கரை பகுதியை அம்மாவட்டக் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். அப்போது, கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரும் ட்ரோனை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியை கொண்டு முகத்தை மூடியும் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து ட்ரோனை நிறுத்தாத காவல் துறையினர், தைல மரங்கள் இருக்கும் காட்டுக்குள் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றனர்.

தைல மர காட்டில் ஒதுங்கிய காதல் ஜோடி

காதலுக்கு ஊரடங்கு இல்லை என முடிவெடுத்த காதல் ஜோடி, தைல மர காட்டுக்குள் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தனர். இதை தூரத்திலிருந்து பார்த்த ட்ரோன் கேஷூவலாக ஜோடிக்கு அருகில் சென்றது. இதனால் பயந்துபோன காதல் ஜோடி தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி பறக்கத் தொடங்கினர். ஆனாலும் அவர்களை ட்ரோன் விடாமல் துரத்தி சென்றது. இந்தக் காட்சிகளை மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

'என்னைப் பார்த்து விழித்து இரு... தெறித்து ஓட ரெடியா இரு' என்பதை அனைவருக்கும் ட்ரோன் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: 'மாஸ்க் இல்லையா... வாங்க கரோனா நோயாளியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்' - மரண பயம் காட்டிய திருப்பூர் போலீஸ்!

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் வெளியே வருபவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல் துறையினர் கையில் எடுத்துள்ள புதிய ஆயுதம் தான் ட்ரோன் எனும் கழுகுப் பார்வை கேமரா. மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து பாய்ந்து மக்களைத் துரத்தி வீட்டுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும் காவல் துறையின் ட்ரோன் பார்வையில், கிரிக்கெட், கேரம் முடிந்து தற்போது காதல் விளையாட்டும் சிக்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏரிக்கரை பகுதியை அம்மாவட்டக் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். அப்போது, கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் அனைவரும் ட்ரோனை கண்டதும் தண்ணீரில் நீந்தியும், மரத்தில் ஏறியும், லுங்கியை கொண்டு முகத்தை மூடியும் தப்பியோடினர். இதைத் தொடர்ந்து ட்ரோனை நிறுத்தாத காவல் துறையினர், தைல மரங்கள் இருக்கும் காட்டுக்குள் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றனர்.

தைல மர காட்டில் ஒதுங்கிய காதல் ஜோடி

காதலுக்கு ஊரடங்கு இல்லை என முடிவெடுத்த காதல் ஜோடி, தைல மர காட்டுக்குள் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தனர். இதை தூரத்திலிருந்து பார்த்த ட்ரோன் கேஷூவலாக ஜோடிக்கு அருகில் சென்றது. இதனால் பயந்துபோன காதல் ஜோடி தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி பறக்கத் தொடங்கினர். ஆனாலும் அவர்களை ட்ரோன் விடாமல் துரத்தி சென்றது. இந்தக் காட்சிகளை மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

'என்னைப் பார்த்து விழித்து இரு... தெறித்து ஓட ரெடியா இரு' என்பதை அனைவருக்கும் ட்ரோன் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: 'மாஸ்க் இல்லையா... வாங்க கரோனா நோயாளியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்' - மரண பயம் காட்டிய திருப்பூர் போலீஸ்!

Last Updated : Apr 24, 2020, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.