ETV Bharat / state

மருத்துவமனைகளில் அன்பு குறைகிறது - ஆளுநர் தமிழிசை கருத்து - Governor tamilisai comment

திருவள்ளூர்: தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனைகளில் அன்பு குறைந்து வருவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கும் ஆளுநர் தமிழிசை
author img

By

Published : Sep 27, 2019, 6:30 PM IST

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில், 2 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரா மெடிக்கல் மருத்துவ கட்டடத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ’என்னை மேதகு என கூறுவதைவிட பாசமிகு சகோதரி என கூறுவதே எனக்கு பெருமையாக உள்ளது. தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டத்திலிருந்து தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசிய எனக்கு 20 நாட்கள் கழித்து தமிழ் பேச வைத்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளேன்.

மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கும் ஆளுநர் தமிழிசை

பிரதமரின் மருத்துவ திட்டத்தில் இதுவரை 50கோடி பேர் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்தத் திட்டத்தில் 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு 17,000கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொடுத்த வேலையை சரியாக செய்ததால், சாதாரண பெண்மணி ஆளுநராக நிற்கிறேன். அதுபோல் நமது வேலைகளில் கவனம் செலுத்தினால் அனைத்தும் நம்மை தேடி வரும். சாதாரணமாக நடவேண்டிய மரம், இன்று இயக்கமாக மாறியுள்ளது. இதற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் காரணம்’ என்றார்.

சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள சவிதா என்ற தனியார் மருத்துவமனையில் ரூ. 40 கோடி செலவில், 2 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரா மெடிக்கல் மருத்துவ கட்டடத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், ’என்னை மேதகு என கூறுவதைவிட பாசமிகு சகோதரி என கூறுவதே எனக்கு பெருமையாக உள்ளது. தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டத்திலிருந்து தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசிய எனக்கு 20 நாட்கள் கழித்து தமிழ் பேச வைத்த நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளேன்.

மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைக்கும் ஆளுநர் தமிழிசை

பிரதமரின் மருத்துவ திட்டத்தில் இதுவரை 50கோடி பேர் இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்தத் திட்டத்தில் 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு 17,000கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கொடுத்த வேலையை சரியாக செய்ததால், சாதாரண பெண்மணி ஆளுநராக நிற்கிறேன். அதுபோல் நமது வேலைகளில் கவனம் செலுத்தினால் அனைத்தும் நம்மை தேடி வரும். சாதாரணமாக நடவேண்டிய மரம், இன்று இயக்கமாக மாறியுள்ளது. இதற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் காரணம்’ என்றார்.

Intro:தற்போதைய காலத்தில் மருத்துவ மனைகளில் அன்பு குறைந்து வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.

Body:சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் 40 கோடி செலவில், 2 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரா மெடிகல் மருத்துவ கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி தெலுங்கானா ஆளுநர் சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.அப்போது பேசிய அவர் மேதகு என கூறுவதை விட பாசமிகு சகோதரி என கூறுவதே எனக்கு பெருமையாக உள்ளது.தெலுங்கானா ஆளுநராக நியமைக்கப்பட்டத்தில் இருந்து தெலுங்கிலும் ,ஆங்கிலத்திலும் பேசிய எனக்கு 20 நாட்கள் கழித்து தமிழ் பேச வைத்த நிகழ்ச்சிக்கு நன்றி.தமிழுக்கு கிடைத்த வரவேற்பினால் தமிழில் பேசிய தமிழிசை.தமிழ் கற்றதால் தமிழ் பேசவில்லை தமிழ் என்னை பெற்றதால் தமிழில் பேசுவதாக தமிழிசை பெருமிதம்.மாணவர்கள் முன்னால்
ஆளுநராக இல்லை, மறுத்துவராகவும் இல்லை, மருத்துவ மாணவியாக நிற்கிறேன்.
20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் இருந்தன.
பிரதம மந்திரி மருத்துவ திட்டம் மூலம் 50கோடி மக்களுக்கு இணைந்துள்ளனர் 46 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 17000கோடி ரூபாய் இதற்கு செலவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் 150 மருத்துவ கல்லூரி உள்ளது.
சாதாரணமாக நடைபெற வேண்டிய மரம் நடுதலை இயக்கமாக செய்யும் அளவிற்கு மாறிவிட்டது.
இயற்கையை நாம் ரசிக்க இயலவில்லை,செலபோன் வந்து அழித்து விட்டது.
Conclusion:குடிநீர் சிக்கனம் தேவை, நான்காம் உலக போர் தண்ணீர் தேவைக்காக இருக்கலாம் அப்துல்கலாம் 2020 புத்தகத்தை மேற்கோள்காட்டி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
கொடுத்த வேலையை சரியாக செய்த சாதாரண பெண் இன்று ஆளுநராக உள்ளேன்
இயற்கையை ரசித்தாள் இயற்கையை அழிக்க மாட்டோம்.
ஒரு யூனிட் மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும் அது சுற்றுசூழலை பாதுகாக்கும்.
அன்பு ஒன்றுதான் இந்த உலகில் பலமானது.
தற்போதைய காலத்தில் மருத்துவ மனைகளில் அன்பு குறைந்து வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.
அன்பு மட்டும் தான் உலகில் பலமாலனது.
மருத்துவர்கள் நோயாளிகளிடம் அனுசரிப்புடம் நடந்து கொள்ள வேண்டும்
அன்பு நிறைந்து இருந்தால் வெற்றி என்பது நிறைந்து இருக்கும்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.