ETV Bharat / state

கடைசி நாளில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்!

author img

By

Published : Dec 17, 2019, 12:22 PM IST

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

local body election nomination in thiruvallu
local body election nomination in thiruvallu

தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் பிற்பகலில் மந்தமானது. மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக சார்பில் முன்னாள் சேர்மன் சரஸ்வதி சந்திரசேகர் தனது கைக்குழந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்த கட்சியினர்

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் சசிகுமார் கூறுகையில், ”கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மக்களை நம்பி வெங்கத்தூர் ஊராட்சி 21ஆவது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருவள்ளூர், கடம்பத்தூர், பூண்டி, எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல் பிற்பகலில் மந்தமானது. மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக சார்பில் முன்னாள் சேர்மன் சரஸ்வதி சந்திரசேகர் தனது கைக்குழந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்த கட்சியினர்

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த காங்கிரஸ் வேட்பாளர் சசிகுமார் கூறுகையில், ”கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மக்களை நம்பி வெங்கத்தூர் ஊராட்சி 21ஆவது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றால், மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.

Intro:இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு விறுவிறுப்பாக நடைபெற்றது கைக்குழந்தையுடன் வந்த திமுக வேட்பாளர். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் v.j ராஜேந்திரனுடன் அக்கட்சி உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக உறுப்பினர் கார்த்தி தெரிவிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மழை வெயில் என்று பாராமல் மக்களுக்காக பாடுபடுவேன் என்றுதெரிவித்தார்

Body:இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு விறுவிறுப்பாக நடைபெற்றது கைக்குழந்தையுடன் வந்த திமுக வேட்பாளர். திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் v.j ராஜேந்திரனுடன் அக்கட்சி உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடம்பத்தூர் ஒன்றியம் கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக உறுப்பினர் கார்த்தி தெரிவிக்கையில் நாங்கள் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மழை வெயில் என்று பாராமல் மக்களுக்காக பாடுபடுவேன் என்றுதெரிவித்தார்

டிசம்பர் 27 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திருவள்ளூர் கடம்பத்தூர் பூண்டி எல்லாபுரம் உள்ளிட்ட 14 ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்று முக்கிய அரசியல் கட்சியினர் திமுக அதிமுக காங்கிரஸ் தேமுதிக நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று தலைவர் பதவி ஒன்றிய கவுன்சிலர் பதவி மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் பிற்பகலில் மந்தநிலையில் காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் திமுக சார்பில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சரஸ்வதி சந்திரசேகர் திமுக கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் மேலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் அதிமுக திமுக காங்கிரஸ் ஏராளமானோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் வேட்பாளர் சசிகுமார் கூறியதாவது, கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மக்களை நம்பி இன்று திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவி வார்டு எண் 29 வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன் நான் வெற்றி பெற்றால் உழைத்து மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.