ETV Bharat / state

அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்! - Thiruvallur Protest

திருவள்ளூர்: பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் பொதுத்துறையாக்குவதற்கு எதிர்ப்பு: குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டம்!
author img

By

Published : Aug 17, 2019, 4:55 PM IST

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82,000 தொழிலாளர்களும், 40,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முடிவை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க இருக்கிறது. இதனை எதிர்த்து பல்வேறு பாதுகாப்புத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டம்!

இந்நிலையில், இன்று படைத்துறை உடை தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இன்ஜின் பேக்டரி உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் திருவள்ளூர் ஆவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஊழியர்களின் குடும்பத்தினர் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82,000 தொழிலாளர்களும், 40,000 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த முடிவை அமல்படுத்துவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க இருக்கிறது. இதனை எதிர்த்து பல்வேறு பாதுகாப்புத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டம்!

இந்நிலையில், இன்று படைத்துறை உடை தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இன்ஜின் பேக்டரி உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் திருவள்ளூர் ஆவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஊழியர்களின் குடும்பத்தினர் உட்பட நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக்க எதிர்ப்பு- தொழிலாளர் குடும்பத்துடன் திரண்டு போராட்டம்- ஆவடியில் நடந்ததுBody:இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 41பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களில் 82ஆயிரம் தொழிலாளர்களும், 40ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த முடிவை அமுல்படுத்துவத்ற்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் வர உள்ளது. இதனையடுத்து பல்வேறு பாதுகாப்பு துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் அனைத்து சம்மேளனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அசோசியேசன்கள் கூட்டாக ஒரு மாத கால வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுத்து உள்ளனர். வருகின்ற 20ந்தேதி முதல் 41பாதுகாப்புத்துறை நிறுவனங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, இன்ஜின் பேக்டரி ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஆவடி அஜய் ஸ்டேடியத்திற்கு வந்தனர். மேலும் தொழிலாளர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் குடியிருப்புகளில் இருந்து குழந்தைகளுடன் போராட்டத்திற்கு ஆதரவாக வந்திருந்தனர். பின்னர், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் மத்திய அரசில் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன், உழைக்கும் மக்கள் இயக்கத் தலைவர் குசேலர் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். இந்த கூட்சத்தில் 4ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.