ETV Bharat / state

ப. சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம்

author img

By

Published : Sep 17, 2019, 4:27 PM IST

திருவள்ளூர் : ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/17-September-2019/4465540_1013_4465540_1568708630584.png

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் M.P தலைமையில் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், ”1658 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை நரேந்நிர மோடி புழக்கத்திலிருந்து எடுத்தார். அதைப் பார்த்து சகிக்க முடியாமல் பேசத் தொடங்கினார் ப.சிதம்பரம் நீங்கள் நாட்டை ஏமாற்றிவிட்டீர்கள், நீங்கள் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார ஊழலை செய்திருக்கிறீர்கள் என்றும் அதன் மதிப்பு எவ்வளவு என்றால் 15.77லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவில் ஊழல் நடைபெற்றுள்ளது. தயவு செய்து உண்மையைக் கூறுங்கள் நான் இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர் எனவே இந்த 2326 கோடி லட்சம் கோடி தாள்களை நீங்கள் அச்சிட 3 அச்சிடும் இயந்திரம்தான் இந்தியாவில் உள்ளது. அதைக்கொண்டு 24 மணிநேரமும் அந்த 3 தொழிற்சாலையும் வேலை செய்தால்கூட அச்சிட 10 மாதங்கள் ஆகும் என சொன்னவர் ப. சிதம்பரம். ப. சிதம்பரம் விவகாரத்தில் நீதிபதிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ”நாடு திவால் ஆகிக்கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. ப சிதம்பரத்தால் உருவாக்கப்பட்ட நிதி அது. அதை அவர் சிக்கனமாக வைத்திருந்தார். உபரி நிதி மூன்று காரணங்களுக்காகத்தான் செலவிடப்படும். ஒன்று நாட்டில் பஞ்சம் வந்தால் செலவிடப்படும், நாட்டில் யுத்தம் வந்தால் செலவிடப்படும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் அதனுடைய மதிப்பு அதிகமாகப் போனால் அப்போது அந்தப் பணத்தை மார்க்கெட்டில் சமப்படுத்துவார்கள். இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் உபரி நிதி செலவிடப்படும். ஆனால் அன்றாட செலவுகளுக்காக இவர்கள் எடுத்திருக்கிறார்கள். இதனால் நாடு விரைவில் திவால் ஆகும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரே நாடு, ஒரே மொழி என்கிற முழக்கத்தை அமித் ஷா முன் வைத்திருக்கிறார். அது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதைப் போல தோன்றும். ஆனால் இந்தியா என்பது ஒரு தேசம் அதனுள் 29 மாநிலங்கள் இருக்கின்றன. 7 துணை மாநிலங்கள் இருக்கின்றன. எனவே இந்தியாவில் இருக்கின்ற 29 மாநிலங்களும் ஒன்றாக முடியாது. தேசம் என்பது வேறு, நாடு என்பது வேறு. இந்தி பரவலாக பேசக்கூடிய மொழியாக இருக்கலாமே ஒழிய எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் M.P தலைமையில் தெற்கு, வடக்கு, மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், ”1658 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை நரேந்நிர மோடி புழக்கத்திலிருந்து எடுத்தார். அதைப் பார்த்து சகிக்க முடியாமல் பேசத் தொடங்கினார் ப.சிதம்பரம் நீங்கள் நாட்டை ஏமாற்றிவிட்டீர்கள், நீங்கள் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார ஊழலை செய்திருக்கிறீர்கள் என்றும் அதன் மதிப்பு எவ்வளவு என்றால் 15.77லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவில் ஊழல் நடைபெற்றுள்ளது. தயவு செய்து உண்மையைக் கூறுங்கள் நான் இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர் எனவே இந்த 2326 கோடி லட்சம் கோடி தாள்களை நீங்கள் அச்சிட 3 அச்சிடும் இயந்திரம்தான் இந்தியாவில் உள்ளது. அதைக்கொண்டு 24 மணிநேரமும் அந்த 3 தொழிற்சாலையும் வேலை செய்தால்கூட அச்சிட 10 மாதங்கள் ஆகும் என சொன்னவர் ப. சிதம்பரம். ப. சிதம்பரம் விவகாரத்தில் நீதிபதிகள் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ”நாடு திவால் ஆகிக்கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. ப சிதம்பரத்தால் உருவாக்கப்பட்ட நிதி அது. அதை அவர் சிக்கனமாக வைத்திருந்தார். உபரி நிதி மூன்று காரணங்களுக்காகத்தான் செலவிடப்படும். ஒன்று நாட்டில் பஞ்சம் வந்தால் செலவிடப்படும், நாட்டில் யுத்தம் வந்தால் செலவிடப்படும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் அதனுடைய மதிப்பு அதிகமாகப் போனால் அப்போது அந்தப் பணத்தை மார்க்கெட்டில் சமப்படுத்துவார்கள். இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் உபரி நிதி செலவிடப்படும். ஆனால் அன்றாட செலவுகளுக்காக இவர்கள் எடுத்திருக்கிறார்கள். இதனால் நாடு விரைவில் திவால் ஆகும்” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரே நாடு, ஒரே மொழி என்கிற முழக்கத்தை அமித் ஷா முன் வைத்திருக்கிறார். அது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதைப் போல தோன்றும். ஆனால் இந்தியா என்பது ஒரு தேசம் அதனுள் 29 மாநிலங்கள் இருக்கின்றன. 7 துணை மாநிலங்கள் இருக்கின்றன. எனவே இந்தியாவில் இருக்கின்ற 29 மாநிலங்களும் ஒன்றாக முடியாது. தேசம் என்பது வேறு, நாடு என்பது வேறு. இந்தி பரவலாக பேசக்கூடிய மொழியாக இருக்கலாமே ஒழிய எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல” என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பு
Intro:இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்தும் பா சிதம்பரம் கைது செய்யப்பட்டதின் சூழ்ச்சியை கண்டித்தும் ஆவடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.Body:இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்தும் பா சிதம்பரம் கைது செய்யப்பட்டதின் சூழ்ச்சியை கண்டித்தும் ஆவடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு வடக்கு மற்றும் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்தில்.

திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் M.P காங்கிரஸ் செயல் தலைவர் அவர்கள் தலைமையில் தற்போது நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக
அகில இந்திய பொது செயலாளர் திரு.முகுல் வாஸ்னிக் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

*மேடையில் பேசிய திருவள்ளுவர் நாடாளுமன்ற உறுப்பினர்மரு.ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில்*

2326 என்றால் என்ன தெரியுமா 2326 என்பது 500 ரூபாய் நோட்டும் 1000 ரூபாய் நோட்டும் மதிப்பீட்டில் பிரதமர் மோடி அவர்கள் புழக்கத்தில் இருந்து ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறித்தாரே அதுதான்

ஆதாவது என்னால் 668 கோடி ரூபாய் என்னால் 1000 ரூபாய் நோட்டுக்களும்.

1658 கோடி 500 ரூபாய் என்னால் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணத்தை நரேந்திர மோடி புழக்கத்தில் இருந்து எடுத்தார்.

அதைப் பார்த்து சகிக்க முடியாமல் பேசத் தொடங்கினார் ப.சிதம்பரம் நீங்கள் நாட்டை ஏமாற்றி விட்டீர்கள் நீங்கள் உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார ஊழலை செய்திருக்கிறீர்கள் என்றும் அதன் மதிப்பு எவ்வளவு என்றால் 15.77லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியாவில் ஊழல் நடைபெற்றுள்ளது.

தயவு செய்து உண்மையைக் கூறுங்கள் நான் இந்த நாட்டின் நிதி அமைச்சராக இருந்தவர் எனவே இந்த 2326 கோடி லட்சம் கோடி தாள்களை நீங்கள் அச்சிட 3 அச்சிடும் இயந்திரம் தான் இந்தியாவில் உள்ளது அதை கொண்டு 24 கு மணிநேரமும் அந்த 3 தொழிற்சாலையும் வேலை செய்தால் கூட அச்சிட 10 மாதம் ஆகும் என சொன்னவர் பா சிதம்பரம்.

நீதிமன்றங்களே பா சிதம்பரம் அவர்களை கைது செய்தது சரிதானா சிதம்பரம் அவர்களை கம்பிக்கு பின்னால் அனுப்பியது நீதி தர்மமா நீதிமன்றங்கள் இதுவரை கொடுத்த தீர்ப்புகள் சரிதானா என்று நீதிபதிகள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

*அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி*

நாடு திவால் ஆகிக்கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரி நிதி இருந்தது. ப சிதம்பரத்தால் உருவாக்கப்பட்ட நிதி அது.

அதை அவர் சிக்கனமாக வைத்திருந்தார்
அந்த உபரி நிதி எதற்கு என்று சொன்னாள் உபரி நிதி மூன்று காரணங்களுக்காக தான் செலவிடப்படும்.

ஒன்று நாட்டில் பஞ்சம் வந்தால் செலவிடப்படும் அல்லது நாட்டில் யுத்தம் வந்தால் அல்லது இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் அதனுடைய மதிப்பு அதிகமாகப் போனால் அப்போது அந்தப் பணத்தை மார்க்கெட்டில் சம படுத்துவார்கள்.

அமெரிக்க டாலரையும் இந்திய ரூபாயின் மதிப்பையும் சமப்படுத்துவது கணிதம் அது. இந்த மூன்று காரணங்களுக்காக தான் உபரி நிதி செலவிடப்படும்.

ஆனால் எதற்காக இவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்றால் அன்றாட செலவுகளுக்காக எடுத்திருக்கிறார்கள்.
அந்த உபரி நிதியானது வீணாகிக்கொண்டிருக்கிறது இதனால் நாடு விரைவில் திவால் ஆகும் என கூறினார்.


*பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி*

அமித்ஷா அவர்களின் இந்தியா ஒரே நாடு ஒரே மொழி என்கிற முழக்கத்தை முன் வைத்திருக்கிறார்.

அது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதைப் போல தோன்றும் ஆனால் இந்தியா என்பது ஒரு தேசம் அதனுள் 29 நாடுகள் இருக்கின்றன. 7 துணை நாடுகள் இருக்கின்றன.

எனவே இந்தியாவில் இருக்கின்ற 29 நாடுகளும் ஒன்றாக முடியாது.

தேசம் என்பது வேறு நாடு என்பது வேறு.இந்த 29 நாடுகளில் ஏராளமான மாற்றங்கள் இருக்கின்றன. மொழி, உணவு,உடை, கலாச்சாரம், இறைவழிபாடு மாற்றம் இருக்கிறது.

எனவே இது ஒன்று என்று சொல்வது தவறான வாதம். ஒரே நாடு ஒரே மொழி என்று சொன்னால் எப்படி ஒரே மொழியாக இருக்க முடியும்.இந்தி பரவலாக பேசக் கூடிய மொழியாக இருக்கலாமே ஒழிய எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல ஏராளமான மொழி பேசக்கூடியவர்கள் இந்த நாட்டிலே இருக்கிறார்கள்.

எனவே நாட்டில் மொழிப்பிரச்சினையை நீங்கள் கொண்டு வரக்கூடாது அது தவறாக முடியும் என்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.