ETV Bharat / state

கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்: பொதுமக்கள் விரட்டிப் பிடிப்பு!

author img

By

Published : Dec 5, 2019, 7:44 AM IST

திருவள்ளூர்: திருத்தணியில் கஞ்சா போதையில் இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து, அவர்களை மிரட்டி செல்ஃபோன்களை பறித்த மூன்று இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

kanja
kanja

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சாலையில், ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் அந்த வழியாகவந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் செல்ஃபோன்களைப் பறித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரின் செல்ஃபோனை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர், பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து அவர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்

பின்னர், அந்த இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சோளிங்கரைச் சேர்ந்த விக்னேஷ், கூடலூரைச் சேர்ந்த சுஜித், ஷாம் சுந்தர் ஆகியோர்தான் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர்கள் அனைவரும் கஞ்சா பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சாலையில், ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் அந்த வழியாகவந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் செல்ஃபோன்களைப் பறித்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவரின் செல்ஃபோனை பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர், பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து அவர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா போதையில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள்

பின்னர், அந்த இளைஞர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சோளிங்கரைச் சேர்ந்த விக்னேஷ், கூடலூரைச் சேர்ந்த சுஜித், ஷாம் சுந்தர் ஆகியோர்தான் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே அவர்கள் அனைவரும் கஞ்சா பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூன்று பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Intro:திருத்தணியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்,இருசக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து மிரட்டி செல்போன் பறிப்பு 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு.


Body:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாம்பாக்கம் சாலையில் 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் கஞ்சா போதையில் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.அப்போது வாலிபர் ஒருவரின் செல்போன் பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்ற கும்பலை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற வாலிபர் பொதுமக்கள் உதவியுடன் மூன்றுபேரை திருத்தணி மாபொசி சாலையில் கையும் களவுமாக பிடித்து அடித்து உடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் சோளிங்கர்ஐ சேர்ந்த விக்னேஷ் வயது 18, கூடலூர் சேர்ந்த சுஜித் வயது 19 மற்றும் ஷாம் சுந்தர் வயது 19 என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கஞ்சா பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுபோன்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.