திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியில் காவல் துறையினர், இரண்டு நாள்களுக்கு முன்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் என்பவரை மடக்கி அவர்கள் சோதனை செய்தனர். இதில் 300 கிலோ கஞ்சாவை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்நபர் காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பியோடினார். தொடர்ந்து, காவல் துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், இன்று (மே.10) அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.