ETV Bharat / state

பைக்மீது லாரி மோதி கட்டடத் தொழிலாளி மரணம்!

author img

By

Published : Oct 21, 2019, 7:41 AM IST

Updated : Oct 21, 2019, 7:48 AM IST

திருவள்ளூர்: மணவாளநகர் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

bike accident dead

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அருகே உள்ள கீழாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவியும் மகனும் உள்ளனர். இந்நிலையில், அவரது மகனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக மணவாள நகரிலிருந்து ஸ்ரீ பெருமந்தூர் நோக்கிச் சென்ற லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்தில் உயிரிழந்த கட்டட தொழிலாளி

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக செல்வத்தின் மனைவியையும் மகனையும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அருகே உள்ள கீழாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(35). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவியும் மகனும் உள்ளனர். இந்நிலையில், அவரது மகனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக மணவாள நகரிலிருந்து ஸ்ரீ பெருமந்தூர் நோக்கிச் சென்ற லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்தில் உயிரிழந்த கட்டட தொழிலாளி

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக செல்வத்தின் மனைவியையும் மகனையும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Intro:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் இரு சக்கர வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி. உடன் வந்த மனைவி மற்றும் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அடுத்த கீழாத்தூர் எல்லை அம்மன் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருபவர் செல்வம் இவருக்கு ஒரு மகன் உள்ளது. இவர் இன்று காலை தன்னுடைய மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தன் மனைவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மணவாளநகரை நோக்கி செல்லும்போது எதிர்பாராத விதமாக மணவாள நகரில் இருந்து ஸ்ரீ பெருமந்தூர் நோக்கி சென்ற லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் செல்வம் வயது 35 என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் செல்வத்துடன் வந்த மனைவி மற்றும் மகளை சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தகவலறிந்து மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.


Conclusion:
Last Updated : Oct 21, 2019, 7:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.