ETV Bharat / state

அபாய ஒலியால் தப்பிய ஏடிஎம் பணம்!

author img

By

Published : Dec 11, 2019, 3:56 PM IST

திருவள்ளூர்: ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல், திடீரென எழுந்த அபாய ஒலியால் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Alert Alarm Saves ATM Robbery
Alert Alarm Saves ATM Robbery

திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு கிளை இந்தியன் வங்கியை ஒட்டியுள்ள ஏடிஎம் மையத்தில் அதிகாலை 3 மணி அளவில், அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே புகுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, மின் இணைப்புக் கம்பிகளை கட்டர் மூலம் துண்டித்தும், அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளை அகற்றியும் சேதப்படுத்தினார்கள். அப்போது அதிலிருந்து எச்சரிக்கை அபாய ஒலி எழும்பியதால், அதிர்ச்சியடைந்த மர்ம கும்பல் ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பி ஓடியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வந்து பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர் கைரேகை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் ஏடிஎம் மையத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர். பின், இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபாய ஒலியால் தப்பிய ஏடிஎம் பணம்

ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பன்னூரில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும், இதனால் ஏடிஎம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாவலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்கிம்மர் மூலம் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்: முக்கிய குற்றவாளி கைது!

திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு கிளை இந்தியன் வங்கியை ஒட்டியுள்ள ஏடிஎம் மையத்தில் அதிகாலை 3 மணி அளவில், அடையாளம் தெரியாத கும்பல் உள்ளே புகுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, மின் இணைப்புக் கம்பிகளை கட்டர் மூலம் துண்டித்தும், அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளை அகற்றியும் சேதப்படுத்தினார்கள். அப்போது அதிலிருந்து எச்சரிக்கை அபாய ஒலி எழும்பியதால், அதிர்ச்சியடைந்த மர்ம கும்பல் ஏடிஎம் மையத்தில் இருந்து தப்பி ஓடியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் வந்து பார்த்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர் கைரேகை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் ஏடிஎம் மையத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர். பின், இந்தக் கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபாய ஒலியால் தப்பிய ஏடிஎம் பணம்

ஏடிஎம் மையத்தில் அதிகாலையில் சிலர் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பன்னூரில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும், இதனால் ஏடிஎம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாவலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்கிம்மர் மூலம் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல்: முக்கிய குற்றவாளி கைது!

Intro:திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி. எச்சரிக்கை அபாய ஒலி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் தப்பியது காவல்துறை விசாரணை


Body:திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள பன்னூர் கிராமத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி. எச்சரிக்கை அபாய ஒலி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் தப்பியது காவல்துறை விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு கிளை இந்தியன் வங்கியை ஒட்டியுள்ள ஏடிஎம் இயந்திரத்தை அதிகாலை 3 மணி அளவில் மர்ம கும்பல் உள்ளே புகுந்து ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மின் இணைப்பு கம்பிகளை கட்டர் மூலம் துண்டித்தும் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளை அகற்றி சேதப்படுத்தினார்கள் அப்போது அதிலிருந்து அலாரம் எச்சரிக்கை அபாய ஒலி எழும்பியது அதனைக் கேட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது.

அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு வந்து பார்த்த போது அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போகாமல் தப்பியது சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல்துறை கைரேகை மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஏடிஎம் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பண்ணுரில் இன்னொரு பகுதியில் கடந்த இரண்டு மூன்று மாதங்கள் முன்பாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகவும் தொடர்ந்து ஏடிஎம் இதுபோன்ற வங்கிகளில் செக்யூரிட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

பேட்டி
லூர்துசாமி


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.