ETV Bharat / state

கவுன்சிலர் பதவிக்கு சீட்டு கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக: உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஜினிகாந்த்...!

author img

By

Published : Dec 19, 2019, 5:07 PM IST

திருவள்ளூர்: உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கொடுத்துவிட்டு அதிமுக வேட்பாளரை நிறுத்தியதால் மனமுடைந்த தேமுதிக ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் எலி மருந்து அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற தேமுதிக உறுப்பினர்!
தற்கொலைக்கு முயன்ற தேமுதிக உறுப்பினர்!

திருவள்ளூர் ஒன்றியத்தின் தேமுதிக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக இரண்டாவது வார்டு எண் ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணியில் இருப்பதால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அந்தப் பகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதே வார்டில் அதிமுகவைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் இவரை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால், அதிமுக உறுப்பினரிடம், 'வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிடுங்கள்' என்று ரஜினிகாந்த் மன்றாடியுள்ளார். ஆனால் அவர் திரும்பப் பெறவில்லை.

தற்கொலைக்கு முயன்ற தேமுதிக உறுப்பினர்!

இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பு ஒன்றிய அலுவலகத்தில் வெளியிடத் தொடங்கியதும் மனமுடைந்த ரஜினிகாந்த், தனது பாக்கெட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து அங்கேயே அருந்தியுள்ளார்.

பின்னர் மயங்கி விழுந்த அவரை, உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் - எம்.பி. ஜோதிமணி

திருவள்ளூர் ஒன்றியத்தின் தேமுதிக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக இரண்டாவது வார்டு எண் ஊராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக கூட்டணியில் இருப்பதால் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அந்தப் பகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதே வார்டில் அதிமுகவைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் இவரை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால், அதிமுக உறுப்பினரிடம், 'வேட்புமனுவை திரும்பப் பெற்றுவிடுங்கள்' என்று ரஜினிகாந்த் மன்றாடியுள்ளார். ஆனால் அவர் திரும்பப் பெறவில்லை.

தற்கொலைக்கு முயன்ற தேமுதிக உறுப்பினர்!

இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பு ஒன்றிய அலுவலகத்தில் வெளியிடத் தொடங்கியதும் மனமுடைந்த ரஜினிகாந்த், தனது பாக்கெட்டில் வைத்திருந்த எலி மருந்தை எடுத்து அங்கேயே அருந்தியுள்ளார்.

பின்னர் மயங்கி விழுந்த அவரை, உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...மிரட்டலுக்கு பயப்படமாட்டோம் - எம்.பி. ஜோதிமணி

Intro:உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கொடுத்து விட்டு கடைசி நேரத்தில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதும். மனமுடைந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எலி மருந்து சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்


Body:உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கொடுத்து விட்டு கடைசி நேரத்தில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியதும். மனமுடைந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எலி மருந்து சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

திருவள்ளூர் ஒன்றியத்தின் தேமுதிக கட்சி ஒன்றிய செயலாளராக இருப்பவர் ரஜினிகாந்த் இவர் உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக வார்டு எண்2 ஊராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக கூட்டணியில் இருப்பதால் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது .ஆனால் அதே வார்டில் அதிமுகவில் சேர்ந்த முருகேசன் என்பவர் இவரை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் இன்று வேட்புமனுத்தாக்கல் வாபஸ் பெறு வதில் கடைசி தினம் என்பதால் அதிமுகவினர் செய்து விடுங்கள் என மன்றாடி வந்தார் ஆனால் அவர்கள் செவிசாய்க்கவில்லை எனக்கூறப்படுகிறது இதை தொடர்ந்து வேட்பாளர்கள் அறிவிப்பு ஒன்றிய அலுவலகத்தில் வெளியிட தொடங்கியதும் மனமுடைந்த ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் தனது பாக்கெட்டில் வைத்து இருந்த எலி மருந்தை எடுத்து அங்கேயே சாப்பிட்டு பின்னர் மயங்கி விழுந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதனால் திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.