ETV Bharat / state

ரூ.1.5 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் பறிமுதல் - மூன்று பேர் கைது - சொகுசு கார்கள் திருட்டு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை பகுதிகளில் திருடுபோயிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்களை ஊத்துக்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

thiruvallur
thiruvallur
author img

By

Published : Feb 9, 2020, 5:43 PM IST

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொகுசு கார்கள் திருடுபோவது தொடர் கதையாக இருந்துவந்தது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாகத் தேடப்பட்டுவந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சி

இந்நிலையில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன், நந்திமங்கலத்தைச் சேர்ந்த பரத் ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும் கார் திருட்டிற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

உடனே அவர்களிடமிருந்த 19 சொகுசு கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 1.5 கோடி என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஜிஆர்டியில் நகை கையாடல் - உதவி மேலாளர் மீது புகார்!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொகுசு கார்கள் திருடுபோவது தொடர் கதையாக இருந்துவந்தது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாகத் தேடப்பட்டுவந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சி

இந்நிலையில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன், நந்திமங்கலத்தைச் சேர்ந்த பரத் ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும் கார் திருட்டிற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

உடனே அவர்களிடமிருந்த 19 சொகுசு கார்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 1.5 கோடி என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஜிஆர்டியில் நகை கையாடல் - உதவி மேலாளர் மீது புகார்!

Intro:1.5 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் பறிமுதல் செய்தனர் உத்துக்கோட்டை காவல்துறை
Body:09-02-2020
1.5 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் பறிமுதல் செய்தனர் உத்துக்கோட்டை காவல்துறை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் சொகுசு கார்கள் திருடு போய் கொண்டிருந்த சம்பவம் தொடர் கதையாக இருந்தது இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடிவந்த நிலையில்.

ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சார்ந்த பிரவீன்,கம்மார் பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்,நந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த பரத் ஆகிய 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்தனர் .

இவர்கள் கொடுத்த தகவலின்படி 19 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர் இவற்றின் மதிப்பு ரூபாய் 1.5 கோடி ஆகும்


பேட்டி ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பேட்டி டிஎஸ்பி
சந்திர தாசன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.