நெல்லை : பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள மரக்கடையில் இரவு திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.
இதுதொடர்பான தகவலின் பேரில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 3 இருசக்கர வாகனங்கள், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து சேதமாயின.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க :மணப்பாறை காவல்நிலையம் முற்றுகை!