ETV Bharat / state

திருநெல்வேலி அருகே கணவர் மீது பெண் காவலர் புகார்

author img

By

Published : May 28, 2020, 11:14 PM IST

திருநெல்வேலி: களக்காட்டில் காவலராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், தனது கணவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Women police complaint on husband for defamation in tirunelveli
Women police complaint on husband for defamation in tirunelveli

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கராணி (37). இவருக்கும், ராதாபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில், தங்கராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகளை சிவ பிரேம்குமார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே தங்கராணி, சிவ பிரேம்குமாரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் 7 லட்சம் ரூபாய், நகைகளை திருப்பிக் கேட்டுள்ளார். பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்து வந்த சிவ பிரேம்குமார், பெண் காவலர் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தங்கராணி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு ஆய்வாளர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வருகிறார்.

இதையும் படிங்க... கணவருடன் தகராறு; மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய மனைவி!

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக பணியாற்றி வருபவர் தங்கராணி (37). இவருக்கும், ராதாபுரத்தில் மளிகைக் கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில், தங்கராணியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய், 10 சவரன் நகைகளை சிவ பிரேம்குமார் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே தங்கராணி, சிவ பிரேம்குமாரிடம் கொடுத்ததாகக் கூறப்படும் 7 லட்சம் ரூபாய், நகைகளை திருப்பிக் கேட்டுள்ளார். பணத்தையும் நகைகளையும் திருப்பிக் கொடுக்க மறுத்து வந்த சிவ பிரேம்குமார், பெண் காவலர் தங்க ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தங்கராணி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ராதாபுரம் பொறுப்பு ஆய்வாளர் ஜெகதா, பெண்கள் வன்கொடுமை, மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை தேடி வருகிறார்.

இதையும் படிங்க... கணவருடன் தகராறு; மூன்று குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய மனைவி!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.