ETV Bharat / state

Heavy Rain: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - வெள்ள இடர் எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீருக்கு மேல் வந்துகொண்டிருக்கிறது.

author img

By

Published : Nov 15, 2021, 8:26 AM IST

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீருக்கு மேல் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஆற்றங்கரைகளில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது.

பிரதான அணை

இந்த நிலையில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. அதைத் தொடர்ந்து அணையிலிருந்து உபரி நீராக ஏழாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மழை தொடர்ந்து நீடித்ததால் தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் வரை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பாபாநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள இடர் எச்சரிக்கை

வெள்ள இடர் எச்சரிக்கை

இதேபோல தென்காசி மாவட்டம் கடனாநதி அணையிலிருந்து ஆயிரத்து 500 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது தவிர ஆங்காங்கே ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஆகியவை இணைந்து 10 ஆயிரம் கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கும் நிலையில் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில்

மேலும், தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ஃபி எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8.300 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. பாபநாசத்தில் 41 மில்லிமீட்டரும், சேர்வலாறு பகுதியில் 28 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 20 மில்லிமீட்டரும், நம்பியாறு பகுதியில் 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு பகுதியில் 70 மில்லிமீட்டரும், அம்பாசமுத்திரம் பகுதியில் 17 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவி பகுதியில் 11 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு பகுதியில் 70 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 52.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கு

இதேபோல நம்பியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நம்பி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 67 இடங்களில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள படித் துறைகள், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் போன்றவற்றில் காவல் துறையினர் ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பொதுமக்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திவருகின்றனர்.

தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் தாழ்வான பகுதிகள், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் காவல் துறையினர் எச்சரிக்கை தகவல்களை விடுத்துவருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பேரிடர் பயிற்சி பெற்ற காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் சுமார் 400 பேர் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியிலும் கண்காணிப்புப் பணியிலும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லையில் தொடர் மழை: பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீருக்கு மேல் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஆற்றங்கரைகளில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருகிறது.

பிரதான அணை

இந்த நிலையில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. அதைத் தொடர்ந்து அணையிலிருந்து உபரி நீராக ஏழாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் மழை தொடர்ந்து நீடித்ததால் தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் வரை திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பாபாநாசம் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள இடர் எச்சரிக்கை

வெள்ள இடர் எச்சரிக்கை

இதேபோல தென்காசி மாவட்டம் கடனாநதி அணையிலிருந்து ஆயிரத்து 500 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது தவிர ஆங்காங்கே ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் ஆகியவை இணைந்து 10 ஆயிரம் கன அடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கும் நிலையில் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில்

மேலும், தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ஃபி எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 8.300 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. பாபநாசத்தில் 41 மில்லிமீட்டரும், சேர்வலாறு பகுதியில் 28 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 20 மில்லிமீட்டரும், நம்பியாறு பகுதியில் 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு பகுதியில் 70 மில்லிமீட்டரும், அம்பாசமுத்திரம் பகுதியில் 17 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவி பகுதியில் 11 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 16 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு பகுதியில் 70 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 52.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கு

இதேபோல நம்பியாறு உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நம்பி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 67 இடங்களில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்தப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள படித் துறைகள், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள் போன்றவற்றில் காவல் துறையினர் ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நெல்லை மாநகர் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பொதுமக்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்திவருகின்றனர்.

தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் தாழ்வான பகுதிகள், தாமிரபரணி ஆற்றங்கரைகளில் காவல் துறையினர் எச்சரிக்கை தகவல்களை விடுத்துவருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் பேரிடர் பயிற்சி பெற்ற காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் சுமார் 400 பேர் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியிலும் கண்காணிப்புப் பணியிலும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க: நெல்லையில் தொடர் மழை: பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.