ETV Bharat / state

இலங்கைத் தமிழர் வெட்டிக்கொலை: மர்ம நபர்களைத் தேடும் போலீசார்!

author img

By

Published : May 15, 2023, 4:26 PM IST

திருநெல்வேலி அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பெயின்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கொலை
murder

திருநெல்வேலி: இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மற்றும் மகன் இலங்கையில் உள்ளனர். 1990ம் ஆண்டு சகோதரர் குடும்பத்தினருடன் ராமச்சந்திரன் இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அவர்களுடன் கங்கை கொண்டானில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தார்.

தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு இலவசமாக வீடு வழங்கி வருகிறது. ஆனால், ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன் இலங்கையில் இருப்பதால் அவருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் முகாமில் வசிப்பவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட்ட நிலையில், ராமச்சந்திரனுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெயின்டர் வேலை செய்யும் ராமச்சந்திரனுக்கு வீடு கொடுக்கப்படாத நிலையில் தனது சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு அடுத்துள்ள ஆளில்லாத வீட்டின் மாடியில் இரவு நேரங்களில் தங்கியது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ராமச்சந்திரன் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, பணி முடிந்து வழக்கம் போல் ராமச்சந்திரன் தூங்குவதற்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் சகோதரரின் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, ராமச்சந்திரனின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி, வருகின்றனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உறவினர்கள் கூறுகையில், "இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபர்களை தட்டிக்கேட்ட சம்பவம் தொடர்பாக, ஏற்பட்ட பிரச்சனையை தலையிட்டு சமரசப்படுத்தியதன் காரணமாகவே, இந்த கொலை நடந்துள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வீட்டை ராமச்சந்திரனுக்கு வழங்கவில்லை. வீடு வழங்கப்பட்டிருந்தால் அவர் மாடியில் தனியாக தங்கியிருக்க மாட்டார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கிடங்கு முன் நின்ற லாரியில் திருட்டு; பெட்டியில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியது யார்?

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களது குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை நகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல்.. நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை

திருநெல்வேலி: இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி மற்றும் மகன் இலங்கையில் உள்ளனர். 1990ம் ஆண்டு சகோதரர் குடும்பத்தினருடன் ராமச்சந்திரன் இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அவர்களுடன் கங்கை கொண்டானில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தார்.

தமிழ்நாடு அரசு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு இலவசமாக வீடு வழங்கி வருகிறது. ஆனால், ராமச்சந்திரனின் மனைவி மற்றும் மகன் இலங்கையில் இருப்பதால் அவருக்கு வீடு ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் முகாமில் வசிப்பவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட்ட நிலையில், ராமச்சந்திரனுக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெயின்டர் வேலை செய்யும் ராமச்சந்திரனுக்கு வீடு கொடுக்கப்படாத நிலையில் தனது சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு அடுத்துள்ள ஆளில்லாத வீட்டின் மாடியில் இரவு நேரங்களில் தங்கியது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ராமச்சந்திரன் தலையிட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, பணி முடிந்து வழக்கம் போல் ராமச்சந்திரன் தூங்குவதற்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் சகோதரரின் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, ராமச்சந்திரனின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி, வருகின்றனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உறவினர்கள் கூறுகையில், "இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபர்களை தட்டிக்கேட்ட சம்பவம் தொடர்பாக, ஏற்பட்ட பிரச்சனையை தலையிட்டு சமரசப்படுத்தியதன் காரணமாகவே, இந்த கொலை நடந்துள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வீட்டை ராமச்சந்திரனுக்கு வழங்கவில்லை. வீடு வழங்கப்பட்டிருந்தால் அவர் மாடியில் தனியாக தங்கியிருக்க மாட்டார். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கிடங்கு முன் நின்ற லாரியில் திருட்டு; பெட்டியில் ஓட்டை போட்டு கைவரிசை காட்டியது யார்?

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களது குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

இதையும் படிங்க: உடுமலைப்பேட்டை நகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல்.. நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.