ETV Bharat / state

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த திருடன் - துரத்திய பொதுமக்கள்

author img

By

Published : Oct 26, 2022, 7:20 PM IST

நெல்லையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த திருடனைச் சிறுவர்கள் உள்படப் பொதுமக்கள் துரத்திச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த மகிழ்ச்சி நகரைச் சேர்ந்தவர் ராஜி. இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ராஜி, தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையறிந்த திருடன் ஒருவர் நேற்று நள்ளிரவு (அக்.25) ராஜி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான்.

வீட்டில் இருந்த பொருள்களைத் திருடிக் கொண்டிருந்தபோது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜி வீட்டு முன்பு திரண்டுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட திருடன் கிடைத்த சில பொருள்களை மட்டும் பையில் அள்ளிக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் தப்பி ஓடிய திருடனைத் துரத்திச் சென்றனர். ஆனாலும் திருடனைப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் திருடன் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கையில் பையுடன் தப்பி ஓடும் திருடனைச் சிறுவர்கள் உள்படப் பொதுமக்கள் துரத்திச் செல்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருடனை துரத்திய மக்கள்

இதையும் படிங்க: மதுபோதையில் அட்டூழியம்; தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய வழக்கறிஞர்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த மகிழ்ச்சி நகரைச் சேர்ந்தவர் ராஜி. இவர், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ராஜி, தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனையறிந்த திருடன் ஒருவர் நேற்று நள்ளிரவு (அக்.25) ராஜி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான்.

வீட்டில் இருந்த பொருள்களைத் திருடிக் கொண்டிருந்தபோது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜி வீட்டு முன்பு திரண்டுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட திருடன் கிடைத்த சில பொருள்களை மட்டும் பையில் அள்ளிக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் தப்பி ஓடிய திருடனைத் துரத்திச் சென்றனர். ஆனாலும் திருடனைப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் திருடன் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கையில் பையுடன் தப்பி ஓடும் திருடனைச் சிறுவர்கள் உள்படப் பொதுமக்கள் துரத்திச் செல்வது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில மாதங்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருடனை துரத்திய மக்கள்

இதையும் படிங்க: மதுபோதையில் அட்டூழியம்; தட்டிக்கேட்ட காவலரை தாக்கிய வழக்கறிஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.