ETV Bharat / state

திருநெல்வேலிக்கு வந்து பாரு; உன் நாக்கை அறுப்போம் - பாஜக நிர்வாகி மிரட்டல்

author img

By

Published : Oct 28, 2022, 1:24 PM IST

திருநெல்வேலிக்கு வந்து பாரு, உன் நாக்கை அறுப்போம் என நெல்லை மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatதிருநெல்வேலிக்கு வந்து பாரு; உன் நாக்கை அறுப்போம் - பாஜக நிர்வாகி ஆபாச பேச்சு
Etv Bharatதிருநெல்வேலிக்கு வந்து பாரு; உன் நாக்கை அறுப்போம் - பாஜக நிர்வாகி ஆபாச பேச்சு

திருநெல்வேலி: தமிழ் மொழிக்கு முடிவுரை எழுதுவதாக கூறி திமுக அரசை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று (அக்-27)பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முன்னாள் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன்," திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவரான சுப.வீரபாண்டியனுக்கு பகிரங்கமாக சவால் விட்டு ஆவேசமாக பேசினார்.

‘அண்ணாமலை இடியட் என்று கூறுவதாக சுப.வீரபாண்டியன் தெரிவிக்கிறார் அது அவரது கருத்து. அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூநூல் அறுப்பதாக சொன்னால் நீயாவது பூநூல் மட்டும் தான் அறுப்பாய். நான் உன் நாக்கை இழுத்து பிடித்து அறுப்பேன். நாங்க அப்படிபட்ட ஆளு, உனக்கு தெரியாது திருநெல்வேலிக்கு வந்து பாரு, ரெண்டு பக்கமும் அறுக்கிறோமா இல்லையா என்று என ஆவேசமாக பேசினார்.

இதை கவனித்த நயினார் நாகேந்திரன் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஏற்கனவே தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவு வரும் நிலையில் பொது மேடையில் அரசியல் தலைவரை மிக ஆபாசமாகவும் பகிரங்கமாகவும் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியின் செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி

திருநெல்வேலி: தமிழ் மொழிக்கு முடிவுரை எழுதுவதாக கூறி திமுக அரசை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று (அக்-27)பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முன்னாள் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன்," திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவரான சுப.வீரபாண்டியனுக்கு பகிரங்கமாக சவால் விட்டு ஆவேசமாக பேசினார்.

‘அண்ணாமலை இடியட் என்று கூறுவதாக சுப.வீரபாண்டியன் தெரிவிக்கிறார் அது அவரது கருத்து. அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூநூல் அறுப்பதாக சொன்னால் நீயாவது பூநூல் மட்டும் தான் அறுப்பாய். நான் உன் நாக்கை இழுத்து பிடித்து அறுப்பேன். நாங்க அப்படிபட்ட ஆளு, உனக்கு தெரியாது திருநெல்வேலிக்கு வந்து பாரு, ரெண்டு பக்கமும் அறுக்கிறோமா இல்லையா என்று என ஆவேசமாக பேசினார்.

இதை கவனித்த நயினார் நாகேந்திரன் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஏற்கனவே தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவு வரும் நிலையில் பொது மேடையில் அரசியல் தலைவரை மிக ஆபாசமாகவும் பகிரங்கமாகவும் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியின் செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.