ETV Bharat / state

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முகூர்த்த கால் நடும் விழா! - kanthimathi amman kovil festival

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா, முகூர்த்த கால் நடும் விழாவுடன் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. இந்த திருவிழாவில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முகூர்த்த கால் நடும் விழாவுடன் இன்று தொடக்கம்!
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முகூர்த்த கால் நடும் விழாவுடன் இன்று தொடக்கம்!
author img

By

Published : May 12, 2023, 1:53 PM IST

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முகூர்த்த கால் நடும் விழாவுடன் இன்று தொடக்கம்!

திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா 48 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் துவக்கமாக முகூர்த்தக் கால் நடும் விழா இன்று(மே 12) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்காக அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பந்தல் கால் கோயிலில் இருந்து சுவாமி சன்னதி தெருவிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கோயில் யானை, காந்திமதி திருவிழா முகூர்த்தகாலுக்கு பிலிரி மரியாதை செய்ய பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து கோயில் வாசல் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர் 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான முகூர்த்தக் கால் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து தேருக்கான பணிகளுக்கு நாள் செய்யப்படும்.

பின்னர் ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும், அதன் பின்னர் சந்திரசேகரர் திருவிழா,நால்வர் திருவிழா நடைபெறுகிறது. பின் அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 24-ஆம் தேதி நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேரோட்டம் ஜூலை இரண்டாம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: Chennai Airport: பயணிகள் வரத்து குறைவால் சென்னை - மைசூரு - சென்னை விமானங்கள் ரத்து!

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முகூர்த்த கால் நடும் விழாவுடன் இன்று தொடக்கம்!

திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வருகிற ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த திருவிழாவில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா 48 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் துவக்கமாக முகூர்த்தக் கால் நடும் விழா இன்று(மே 12) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவிற்காக அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. பின்னர், கோயில் வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பந்தல் கால் கோயிலில் இருந்து சுவாமி சன்னதி தெருவிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கோயில் யானை, காந்திமதி திருவிழா முகூர்த்தகாலுக்கு பிலிரி மரியாதை செய்ய பந்தல் காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து கோயில் வாசல் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர் 48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான முகூர்த்தக் கால் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து தேருக்கான பணிகளுக்கு நாள் செய்யப்படும்.

பின்னர் ஊர் காவல் தெய்வமாக விளங்கும் பிட்டாபுரத்தி அம்மன் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் 10 நாட்கள் விநாயகர் திருவிழாவும், அதன் பின்னர் சந்திரசேகரர் திருவிழா,நால்வர் திருவிழா நடைபெறுகிறது. பின் அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 24-ஆம் தேதி நெல்லையப்பருக்கான ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேரோட்டம் ஜூலை இரண்டாம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: Chennai Airport: பயணிகள் வரத்து குறைவால் சென்னை - மைசூரு - சென்னை விமானங்கள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.