ETV Bharat / state

சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: 'சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைங்க...!' - போர்க்கொடி உயர்த்தும் நாங்குநேரி வாசிகள்!

author img

By

Published : Sep 27, 2019, 2:35 PM IST

திருநெல்வேலி: ஏழு உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என வாக்குப்பதிவுக்கு முன்னரே அரசு அறிவித்திட வேண்டும் என நாங்குநேரி தொகுதியில் உள்ள 64 கிராமங்களிலும் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

ஏழு சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசு அறிவித்திட வேண்டுமென பல ஆண்டுகளாக நாங்குநேரி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஏழு சாதிய பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவின் பரிந்துரைப்படி அரசு விரைவில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் எனவும் உறுதியளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.

எனவே ஏழு உள்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முன்னர் அரசு அறிவிக்க வேண்டும் என நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உன்னங்குளம், பெருமாள் நகர், இளையார்குளம் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்; இல்லையென்றால் இடைத்தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரைவில் மாநாடு - பிரிக்ஸ்

ஏழு சாதிய உள்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசு அறிவித்திட வேண்டுமென பல ஆண்டுகளாக நாங்குநேரி தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மக்களவைத் தேர்தலின்போது தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஏழு சாதிய பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவின் பரிந்துரைப்படி அரசு விரைவில் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் எனவும் உறுதியளித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.

எனவே ஏழு உள்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முன்னர் அரசு அறிவிக்க வேண்டும் என நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உன்னங்குளம், பெருமாள் நகர், இளையார்குளம் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்; இல்லையென்றால் இடைத்தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரைவில் மாநாடு - பிரிக்ஸ்

Intro:7 உட்பிரிவுளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசு அறிவித்திட வேண்டும் என நாங்குநேரி தொகுதியில் உள்ள 64 கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வாக்குப்பதிவுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.Body:7 உட்பிரிவுளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசு அறிவித்திட வேண்டும் என நாங்குநேரி தொகுதியில் உள்ள 64 கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வாக்குப்பதிவுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


குடும்பன் , பன்னாடி, காலாடி, கடையன் உள்ளிட்ட 7 ஜாதிய உட்பிரிபுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்திட வேண்டி பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்டம் சங்கராபேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த குழுவின் பரிந்துரைப்படி அரசு விரைவில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் என உறுதியளித்தார் . ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. எனவும் 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என நாங்குநேரி இடைதேர்தலுக்கு முன்னர் அறிவிக்கவேண்டும் என நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உன்னங்குளம், பெருமாள் நகர், இளையார்குளம் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்க போவதாக வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாக அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் இல்லை என்றால் இடைத்தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.