ETV Bharat / state

நாங்குநேரி கொலை விவகாரம் - பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மீது பாய்ந்த குண்டர் சட்டம்

author img

By

Published : Oct 12, 2022, 10:14 PM IST

நெல்லை நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி ராக்கேட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நாங்குநேரி கொலை விவகாரம்- பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்!
நாங்குநேரி கொலை விவகாரம்- பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்!

திருநெல்வேலி: நாங்குநேரியைச் சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு அதில் சிலர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தென் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இன்று (அக்.12) கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாமிதுரை தரப்பிற்கும், ரவுடி ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே சாதி ரீதியாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி சாமிதுரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட்டு ராஜாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்து அவரும் பதுங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார் ராக்கெட் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் வெளிநாடு தப்பி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார், ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜியத்தில் கொடி கட்டி பறந்தவர் இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆனைக்குடி 1990 கால கட்டங்களில் சாதி ரீதியான சண்டைகள் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார்.

நாடார் சமுதாயத்தின் முக்கிய தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார் பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலது கரமாக இருந்து வந்தார் பின்னர் அவரது மறைவுக்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பை தொடங்கியவர் பின்னாளில் பனங்காட்டு படை கட்சி என்ற கட்சியை தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் தற்போது கர்நாடக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் இணைந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக இருவரும் ஆலங்குளம் பகுதியில் ஹரி நாடாருக்காக பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க செய்தனர்.

குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராக பார்க்கப்பட்ட ராக்கெட் ராஜா நேரடியாக களத்தில் வந்து பிரச்சாரம் செய்த காரணத்தால் அத்தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் சுமார் 30000 வாக்குகள் பெற்று திமுகவின் முக்கிய புள்ளியான பூங்கோதை ஆலடி அருணா தோற்க காரணமாக இருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து ராக்கெட் ராஜா மீது சிறையில் இருந்தபடி ஹரி நாடார் பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து வருகிறார். இது போன்ற நிலையில் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாங்குநேரி கொலை விவகாரம்- பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்!

இந்த நிலையில் ராக்கெட் ராஜா தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் விஷ்ணு அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கான நகல் கோயம்புத்தூர் சிறையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:50 ஆண்டுகள் பழைமையான திருவாரூர் கோயில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

திருநெல்வேலி: நாங்குநேரியைச் சேர்ந்த சாமிதுரை (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு அதில் சிலர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக தென் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இன்று (அக்.12) கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாமிதுரை தரப்பிற்கும், ரவுடி ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே சாதி ரீதியாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி சாமிதுரை கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட்டு ராஜாவை தீவிரமாக தேடி வந்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்து அவரும் பதுங்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார் ராக்கெட் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் வெளிநாடு தப்பி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார், ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜியத்தில் கொடி கட்டி பறந்தவர் இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த ஆனைக்குடி 1990 கால கட்டங்களில் சாதி ரீதியான சண்டைகள் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார்.

நாடார் சமுதாயத்தின் முக்கிய தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார் பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலது கரமாக இருந்து வந்தார் பின்னர் அவரது மறைவுக்கு பிறகு சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே நாடார் மக்கள் சக்தி என்ற அமைப்பை தொடங்கியவர் பின்னாளில் பனங்காட்டு படை கட்சி என்ற கட்சியை தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

மேலும் தற்போது கர்நாடக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாருடன் இணைந்து 2022 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். குறிப்பாக இருவரும் ஆலங்குளம் பகுதியில் ஹரி நாடாருக்காக பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க செய்தனர்.

குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராக பார்க்கப்பட்ட ராக்கெட் ராஜா நேரடியாக களத்தில் வந்து பிரச்சாரம் செய்த காரணத்தால் அத்தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் ஹரிநாடார் சுமார் 30000 வாக்குகள் பெற்று திமுகவின் முக்கிய புள்ளியான பூங்கோதை ஆலடி அருணா தோற்க காரணமாக இருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

மோசடி வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து ராக்கெட் ராஜா மீது சிறையில் இருந்தபடி ஹரி நாடார் பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து வருகிறார். இது போன்ற நிலையில் ராக்கெட் ராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாங்குநேரி கொலை விவகாரம்- பிரபல ரவுடி ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ச்சல்!

இந்த நிலையில் ராக்கெட் ராஜா தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல்துறையின் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் விஷ்ணு அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கான நகல் கோயம்புத்தூர் சிறையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:50 ஆண்டுகள் பழைமையான திருவாரூர் கோயில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.