ETV Bharat / state

நாங்குநேரி சம்பவம்: 6 சிறார்கள் கைது - பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிகாரிகள் நிதியுதவி!

author img

By

Published : Aug 12, 2023, 9:31 AM IST

Updated : Aug 12, 2023, 10:08 AM IST

நெல்லையில் சாதி பிரச்சினையால் வீடு புகுந்து தாக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் நேரில் சென்று நிதி உதவி வழங்கினர்.

நெல்லை
Nellai

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியருக்கு பிளஸ் 2 படிக்கும் மகன் மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள். நாங்குநேரியைச் சேர்ந்த இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதே பள்ளியில் படிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், நாங்குநேரியை சேர்ந்த பிளஸ் 2 மாணவருக்கும் இடையே சிறிய சிறிய பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அந்த பிரச்னைகள் அனைத்தும் சாதி ரீதியிலான மோதலாக மாறி முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என கூறி கடந்த 8ஆம் தேதி சென்னைக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த நாங்குநேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரின் தாய் ரயில் நிலையத்திற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இதையும் படிங்க: "நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அந்த குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்ததாகத் தெரிகிறது. மறுநாள் பள்ளிக்குச் சென்ற நாங்குநேரியைச் சேர்ந்த மாணவரை புகாருக்கு உள்ளான மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் எப்படி எங்களைப் பற்றி புகார் செய்யலாம் என பிரச்னை செய்துள்ளனர்.

பின்னர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் வீடு புகுந்து பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது அதை தடுக்கச் சென்ற அவரது தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு நாங்குநேரி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வள்ளியூர் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் அதே பள்ளியில் படித்த இடைநின்ற இரண்டு சிறார் உள்பட ஆறு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரசு உத்தரவின் பெயரில் ஆதி திராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதியில் முதல் கட்டமாக 1,92,500 ரூபாயை பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாபதியிடம் வழங்கினார்.

மேலும், அனைத்து உதவிகளும் அரசு செய்ய தயாராக இருப்பதாகவும், அடுத்த கட்ட நிதியையும் உடனே பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘பாரதிய’ பெயர் மாற்றம்: இது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியருக்கு பிளஸ் 2 படிக்கும் மகன் மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் மகள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள். நாங்குநேரியைச் சேர்ந்த இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இதே பள்ளியில் படிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், நாங்குநேரியை சேர்ந்த பிளஸ் 2 மாணவருக்கும் இடையே சிறிய சிறிய பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அந்த பிரச்னைகள் அனைத்தும் சாதி ரீதியிலான மோதலாக மாறி முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என கூறி கடந்த 8ஆம் தேதி சென்னைக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த நாங்குநேரியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரின் தாய் ரயில் நிலையத்திற்குச் சென்று அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இதையும் படிங்க: "நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அந்த குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்ததாகத் தெரிகிறது. மறுநாள் பள்ளிக்குச் சென்ற நாங்குநேரியைச் சேர்ந்த மாணவரை புகாருக்கு உள்ளான மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் எப்படி எங்களைப் பற்றி புகார் செய்யலாம் என பிரச்னை செய்துள்ளனர்.

பின்னர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் வீடு புகுந்து பிளஸ் 2 மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அப்போது அதை தடுக்கச் சென்ற அவரது தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு நாங்குநேரி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வள்ளியூர் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் அதே பள்ளியில் படித்த இடைநின்ற இரண்டு சிறார் உள்பட ஆறு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அரசு உத்தரவின் பெயரில் ஆதி திராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதியில் முதல் கட்டமாக 1,92,500 ரூபாயை பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அம்பிகாபதியிடம் வழங்கினார்.

மேலும், அனைத்து உதவிகளும் அரசு செய்ய தயாராக இருப்பதாகவும், அடுத்த கட்ட நிதியையும் உடனே பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘பாரதிய’ பெயர் மாற்றம்: இது மொழி சர்வாதிகாரத்தை காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!

Last Updated : Aug 12, 2023, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.