ETV Bharat / state

‘அதிமுகவை வீழ்த்த மக்கள் காத்திருக்கின்றனர்’ - வைகோ சாடல்

author img

By

Published : Oct 12, 2019, 1:37 PM IST

திருநெல்வேலி: இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

mdmk leader vaiko

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நெல்லை வந்த வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வைகோ

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனும், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றத்திற்கான முன்னுரையாக, முன்னோட்டமாக அமைந்துள்ளது. எடப்பாடி அரசு ஊழலில் புரையோடிக்கிடக்கிறது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என பிற மாநிலத்தவர்களை நுழைக்கும் செயலை இந்த அரசு செய்துவருகிறது.

விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். இந்த அரசை வீழ்த்த காத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று கடுமையாகச் சாடினார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக நெல்லை வந்த வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோர் வரவேற்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் வைகோ

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனும், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றத்திற்கான முன்னுரையாக, முன்னோட்டமாக அமைந்துள்ளது. எடப்பாடி அரசு ஊழலில் புரையோடிக்கிடக்கிறது. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என பிற மாநிலத்தவர்களை நுழைக்கும் செயலை இந்த அரசு செய்துவருகிறது.

விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கொதித்துப் போய் உள்ளனர். இந்த அரசை வீழ்த்த காத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று கடுமையாகச் சாடினார்.

Intro:இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான பாயிரமாக , முன்னுரையாக, முன்னோட்டமாக அமையும் என்றும் , மக்கள் கொதித்து போய் உள்ளனர் , இந்த அரசை வீழ்த்த காத்திருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் தெரிவித்துள்ளார் Body:இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னுரையாக, முன்னோட்டமாக அமையும் என்றும் , மக்கள் கொதித்து போய் உள்ளனர் , இந்த அரசை வீழ்த்த காத்திருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் தெரிவித்துள்ளார் . 


நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபிமனோகரனை ஆதரித்து நாளை 12-ந்தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொள்கிறார் . இந்நிலையில் நெல்லை வந்த அவரை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் , கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோர் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர் . 

இதனைத் தொடர்ந்து வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபிமனோகரனும் , விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியும் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் . இரண்டு உறுதி செய்யப்பட்ட வெற்றி . திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சிமாற்றத்திற்கான முன்னுரையாக , முகப்புரையாக , முன்னோட்டமாக அமைந்துள்ளது. எடப்பாடி அரசு ஊழலில் புரையோடிக்கிடக்கிறது. இந்த ஆட்சியில் சாலை வசதி இல்லை , குடிதண்ணீர் பிரச்சனை , வேலையில்லா திண்டாட்டம் என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . மின்வாரியம் , ரெயில்வே துறையில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ரெயில்வே துறையில் திருச்சி மண்டலத்தில் 538 பணி இடங்களில் 475 பேர் வேற்றுமாநிலத்தவர்கள் , மதுரை கோட்டத்தில் 572 பணியிடத்தில் 11 பேர் தமிழகர்கள் இடம் பெற்றுள்ளனர் . ஓரே நாடு , ஓரே குடும்ப அட்டை என பிறமாநிலத்தவர்களை நுழைக்கும் செயலை இந்த அரசு செய்துவருகிறது. விவசாயிகள் , மீனவர்கள் , நெசவாளர்கள் என அனைத்து  தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் கொதித்துப் போய் உள்ளனர் இந்த அரசை வீழ்த்த காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார் . 
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில்  எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் வளர்ச்சி , நாங்குநேரியின் வளர்ச்சி என வளர்ச்சியை மையமாக கொண்டது எங்கள் கூட்டணி . அதிமுக என்பது  எந்த கொள்கையும் , லட்சியமும் குறிக்கோளும் இல்லாத கட்சி ஈ பொருள் ஈட்டுவதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது., சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர் . பெருந்தலைவர் காமராஜருக்கு கடற்கரையில் சமாதி வைப்பதற்கு கலைஞர் அனுமதி தரவில்லை , அந்த கட்சியோடு காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது என்று தனக்கு தெரியாத ஒரு வரலாற்றை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொல்லியிருக்கிறார் .வரலாற்றை அறிந்து கொள்ள அதிகம் படிக்கவேண்டும் . எதையுமே படிக்காதவர்கள் வரலாற்றைப்பற்றி பேசக்கூடாது. அமைச்சர் தொடர்ந்து இந்த தவறை செய்து வருகிறார் . பெருந்தலைவர் காமராஜருக்கு கடற்கரையில் சமாதி , நினைவு இல்லம் கட்டவேண்டும் என்று காங்கிரஸ் ஒருபோதும் கோரியது இல்லை . இதுகுறித்து அன்றே நெடுமாறன் தெளிவாக கூறியுள்ளார்  தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில்தான் காமராஜருக்கு நினைவு இல்லம் கட்டவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் , ஆனால் கலைஞர் அவர்கள்தான் ஒரு பொது இடத்தில் வையுங்கள் , காந்தி மண்டபத்திற்கு அருகில் வையுங்கள் என்று சொன்னதாக வரலாறு, இந்த பகுதியில் காமராஜர் மீது பற்றுக்கொண்டுள்ளவர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதால் ஒரு பொய்யான கருத்தை அழுத்தமாக பயன்படுத்தும் அரசியலை அதிமுக செய்கிறது என்று தெரிவித்தார் . Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.