ETV Bharat / state

ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை - நெல்லையில் அறிமுகம்!

author img

By

Published : Jun 30, 2022, 11:02 PM IST

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பெளத்திரம், மூலம் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவைசிகிச்சை செய்யும் நவீன இயந்திரம் தென்தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை
ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை

திருநெல்வேலி: முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் பெளத்திரம், மூலம் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் நவீன இயந்திரம் தென்தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் இன்று (ஜூன் 30) அந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்தால் வலி இருக்காது. மேலும், மறுநாளே நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்வதுடன் ரத்த இழப்பு இருக்காது என முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட மருத்துவ இயந்திரம் பயன்படுத்தாமல் இருப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று நெல்லை வந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியது குறித்து பத்ரிகையாளர்கள் கேட்டபோது, அந்தக் கருவிகள் பராமரிப்பில் தான் இருக்கிறது என்றார். மேலும் அவர், 'நெல்லையில் இன்று 48 கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அதிகம் மாநகரைச் சார்ந்தவர்கள். ஆனால் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆறு பேர் மட்டுமே அட்மிஷனில் உள்ளனர். ஐசியூவில் யாரும் இல்லை. கரோனா விதிகளை கண்டிப்பாக கடைபிடித்தால் நோயைத் தடுக்கலாம். ஒமைக்ரான் போன்று தற்போது பரவும் வைரஸ் தீவிரமாக இல்லாமல் இருந்தால் நல்லது. தற்போது பரவி வரும் தொற்று குறைந்த தாக்கத்துடன் இருப்பதாகத் தான் தெரிகிறது.

ஆக்சிஜன் தேவை இருந்தால் மட்டும் தான் மருத்துவமனையில் சேர்க்கிறோம். இங்கு ஏழு நாள் சிகிச்சை கொடுக்கப்படும். இணை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது. நெல்லையில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 160 ஐசியூ படுக்கைகள் உள்ளன. பிரசவ வார்டிலும் ஆக்சிஜன் சப்ளையுடன் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன' என்று ரவிச்சந்திரன் பேட்டியில் தெரிவித்தார்.

ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை

நெல்லை மாவட்டத்தில் சில தினங்களாக கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிய உச்சமாக 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகரில் மட்டும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று ஒரே நாளில் மருத்துவர்கள், மாணவர்கள் உள்பட ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் நெல்லை மாநகர மக்கள் அச்சம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராமர் கோயில் கட்ட ஒரே மாதத்தில் பல கோடி நன்கொடை வசூல்: எவ்வளவு தொகை தெரியுமா?

திருநெல்வேலி: முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் பெளத்திரம், மூலம் போன்ற ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை செய்யும் நவீன இயந்திரம் தென்தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் இன்று (ஜூன் 30) அந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

இந்த இயந்திரம் மூலம் அறுவை சிகிச்சை செய்தால் வலி இருக்காது. மேலும், மறுநாளே நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு செல்வதுடன் ரத்த இழப்பு இருக்காது என முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட மருத்துவ இயந்திரம் பயன்படுத்தாமல் இருப்பதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று நெல்லை வந்த சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியது குறித்து பத்ரிகையாளர்கள் கேட்டபோது, அந்தக் கருவிகள் பராமரிப்பில் தான் இருக்கிறது என்றார். மேலும் அவர், 'நெல்லையில் இன்று 48 கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் அதிகம் மாநகரைச் சார்ந்தவர்கள். ஆனால் நெல்லை அரசு மருத்துவமனையில் ஆறு பேர் மட்டுமே அட்மிஷனில் உள்ளனர். ஐசியூவில் யாரும் இல்லை. கரோனா விதிகளை கண்டிப்பாக கடைபிடித்தால் நோயைத் தடுக்கலாம். ஒமைக்ரான் போன்று தற்போது பரவும் வைரஸ் தீவிரமாக இல்லாமல் இருந்தால் நல்லது. தற்போது பரவி வரும் தொற்று குறைந்த தாக்கத்துடன் இருப்பதாகத் தான் தெரிகிறது.

ஆக்சிஜன் தேவை இருந்தால் மட்டும் தான் மருத்துவமனையில் சேர்க்கிறோம். இங்கு ஏழு நாள் சிகிச்சை கொடுக்கப்படும். இணை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது. நெல்லையில் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் 160 ஐசியூ படுக்கைகள் உள்ளன. பிரசவ வார்டிலும் ஆக்சிஜன் சப்ளையுடன் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன' என்று ரவிச்சந்திரன் பேட்டியில் தெரிவித்தார்.

ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை

நெல்லை மாவட்டத்தில் சில தினங்களாக கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிய உச்சமாக 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகரில் மட்டும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று ஒரே நாளில் மருத்துவர்கள், மாணவர்கள் உள்பட ஆறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் நெல்லை மாநகர மக்கள் அச்சம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராமர் கோயில் கட்ட ஒரே மாதத்தில் பல கோடி நன்கொடை வசூல்: எவ்வளவு தொகை தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.