திருநெல்வேலி: மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் மகேஸ்வரி. பணிச்சுமை காரணமாகவும் உயர் அலுவலர்களின் நெருக்குதல்கள் காரணமாகவும் மகேஸ்வரி திடீரென அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.
மகேஸ்வரி கடந்த வாரம் திடீரென நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக நெல்லை மாநகர காவல் துறையில் தொடர்ச்சியாகக் காவலர்கள், உயர் அலுவலர்கள் பலர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் வாடிக்கையாக தொடர்ந்துவருகிறது.
மகேஸ்வரி ஆடியோ
எனவே ஆய்வாளர் மகேஸ்வரியும் பணிச்சுமை, உயர் அலுவலர்களின் டார்ச்சர் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மகேஸ்வரி பூரண குணமடைந்து சில நாள்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்தச் சூழ்நிலையில் தான் தற்கொலை செய்யவில்லை என்றும், இதற்கான அவசியம் எனக்கு இல்லை என்றும் ஆய்வாளர் மகேஸ்வரி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன்
அந்த ஆடியோவில் பேசும் அவர், "காவல் துறையில் இருப்பதால் சமூக வலைதளங்களில் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் என்னைப் பற்றிய சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றன. நான் கௌரவமான பணியில் இருக்கிறேன் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் தொடர்ச்சியாகப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது கடும் மழையிலும் வேலை செய்தேன். அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தேன்.
![தற்கொலை தீர்வல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13618161_np.jpg)
ஏற்கனவே பணியில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக உயர் அலுவலர்களால் பாராட்டைப் பெற்றுள்ளேன். எனது தந்தை இறந்த செய்தி கேட்ட பிறகும் சுதந்திர தின அணிவகுப்பு நடத்திய காரணத்திற்காக தற்போதைய முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றேன்.