ETV Bharat / state

நெல்லை அருகே இரட்டை ரயில் பாதைக்காக நிலம் கையகம்- விவசாயிகள் முற்றுகை!

author img

By

Published : Sep 4, 2019, 7:37 AM IST

நெல்லை: முன்னீர்பள்ளம் மருதம்நகர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரட்டை ரயில்வே பாதைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

farmers_protest

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம் நகர் பகுதியில் ரயில்வே துறை சார்பில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகக் கூறி நேற்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர், ரயில் பணிகள் நடைபெறாமல் நிறுத்தக்கோரி ரயில்வே பணி நடக்கும் இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ரயில்வே துறை சார்பில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு பணிகளை தொடங்குவதாகவும், உறுதியளித்த பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும்போது, "இந்தப் பகுதியில் இரண்டு, மூன்று போக விளைச்சல் நடைபெற்றுவருகிறது. மேலும், இரட்டை ரயில் பாதை பணிக்காக விவசாயத்திற்கு பெரிதும் பயன்பெறும் கால்வாய்களை அடைத்தும் நிலங்களை கையகப்படுத்தி ரயில்வே நிர்வாகம் அராஜக போக்கில் ஈடுபடுகிறது.

கையகப்படுத்திய நிலத்திற்கு எங்களுக்கு எந்தவித நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்காவிட்டால் மேலும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம் நகர் பகுதியில் ரயில்வே துறை சார்பில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகக் கூறி நேற்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர், ரயில் பணிகள் நடைபெறாமல் நிறுத்தக்கோரி ரயில்வே பணி நடக்கும் இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ரயில்வே துறை சார்பில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு பணிகளை தொடங்குவதாகவும், உறுதியளித்த பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும்போது, "இந்தப் பகுதியில் இரண்டு, மூன்று போக விளைச்சல் நடைபெற்றுவருகிறது. மேலும், இரட்டை ரயில் பாதை பணிக்காக விவசாயத்திற்கு பெரிதும் பயன்பெறும் கால்வாய்களை அடைத்தும் நிலங்களை கையகப்படுத்தி ரயில்வே நிர்வாகம் அராஜக போக்கில் ஈடுபடுகிறது.

கையகப்படுத்திய நிலத்திற்கு எங்களுக்கு எந்தவித நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்காவிட்டால் மேலும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தனர்.

Intro:நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம்நகர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரட்டை ரயில்வே பாதை பணிக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில்வே பணிகளை செய்ய விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Body:நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம்நகர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரட்டை ரயில்வே பாதை பணிக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில்வே பணிகளை செய்ய விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம் நகர் பகுதியில் ரயில்வே துறை சார்பில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றது இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருவதாக தெரிய வருகிறது இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறி இன்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், ரயில் பணிகள் நடைபெறாமல் நிறுத்தக் கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில்வே பணி நடக்கும் இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் பணி நடக்கும் இடத்தில் அவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் இரயில்வேதுறை சார்பில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையின் போது அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு பணிகளை தொடங்குவதாகவும் அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர் இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது இந்தப் பகுதியில் இரண்டு மற்றும் மூன்று போக விளைச்சல் நடைபெற்று வருகிறது இரட்டை ரயில்வே பணிக்காக விவசாயத்திற்கு பெரிதும் பயன்பெரும் கால்வாய்கள் அடைத்தும் நிலங்களை கையகப்படுத்தியும், ரயில்வே நிர்வாகத்தின் அராஜக போக்கில் ஈடுபடுவதாகவும் மேலும் கையகப்படுத்திய நிலத்திற்கு எங்களுக்கு எந்தவித நஷ்டஈடு வழங்க வில்லை என்றும் கூறுகின்றனர் இதனால்தான் தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தங்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்காவிட்டால் மேலும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.