ETV Bharat / state

ஏமாற்றிய பருவமழை; தண்ணீரை நிறுத்திய அதிகாரிகள்; பயிரை சாகுபடி செய்ய வழி தெரியாது திணறும் விவசாயிகள்..

author img

By

Published : Aug 6, 2023, 8:00 PM IST

கார் சாகுபடிக்கான நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் போதிய மழை நீர் வளம் இல்லாத காரணத்தால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக திறக்க முடியாத நிலை உருவாகி விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கான நீர் நிறுத்திவைப்பு
பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கான நீர் நிறுத்திவைப்பு

பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கான நீர் நிறுத்திவைப்பு

திருநெல்வேலி: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆண்டுதோறும் விவசாயிகள் கார் சாகுபடி பணிகள் மேற்கொள்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளை நம்பியே மேற்கண்ட பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது.

மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மேற்கண்ட அணைகள் திகழ்கின்றன. ஆனால் பருவமழை பொய்ப்பதால் ஜூன் மாதம் 1ம் தேதி, பெரும்பாலும் அணைகளில் தண்ணீர் திறப்பதில்லை. அந்த வகையில் இந்த ஆண்டும் கார் சாகுபடி மேற்கொள்வதற்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை பொய்த்து போன காரணத்தினாலும், தென்மேற்கு பருவமழை கிடைக்க வேண்டிய நேரத்தில் உரிய மழை பொழிவு கிடைக்காத காரணத்தினாலும், அணைகளில் நீர் இருப்பு வெகு குறைவாகவே இருந்தது. எனினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 18ஆம் தேதி கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

70 அடிக்கும் மேலாக நீர்மட்டம் இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அதனை நம்பியும், மழைப்பொழிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கான நீர் வரத்தும் வெகுவாக குறைந்து. அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக குறைய தொடங்கியது.

தற்போதைய நிலையில் 124 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் குறைந்தபட்சம் 64 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 414 கன அடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருப்பதன் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையிலும், குறைந்த அளவான நீர் இருப்பாக 44 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இதனால் எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கார் சாகுபடி விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், அதனை வேளாண் துறை அதிகாரிகள் மூலமாக விவசாயிகளுக்கு தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கும்படியும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாபநாசம் அணையில் இருந்து கடந்த மாதம் ஜூலை 18ஆம் தேதி கனடியன் கால்வாய், மேலழகியான் கால்வாய், கீழ அழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக சுமார் 18,000 ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே மழைப்பொழிவு இல்லாததால் தற்போது விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மிக மிக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வினாடிக்கு சுமார் 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 60 கன அடி மட்டுமே விவசாய தேவைக்காக திறக்கப்படுகிறது. இதனால் தண்ணீரை நம்பி நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள், கடும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, பத்தமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடவுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அணைக்கான நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள அதே வேளையில், தென் மாவட்டங்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த உடன் திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சி நிலவரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

போதிய மழை இல்லாத காரணத்தால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடவு செய்யப்பட்ட நாற்றுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயத்திற்கான இழப்பீடு நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பயன்பாட்டுக்கே வராத திட்டத்திற்கு வரி விதிக்கும் மாநகராட்சி... திணறும் திருப்பூர் மக்கள்!

பாபநாசம் அணையிலிருந்து கார் சாகுபடிக்கான நீர் நிறுத்திவைப்பு

திருநெல்வேலி: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆண்டுதோறும் விவசாயிகள் கார் சாகுபடி பணிகள் மேற்கொள்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளை நம்பியே மேற்கண்ட பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது.

மேலும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மேற்கண்ட அணைகள் திகழ்கின்றன. ஆனால் பருவமழை பொய்ப்பதால் ஜூன் மாதம் 1ம் தேதி, பெரும்பாலும் அணைகளில் தண்ணீர் திறப்பதில்லை. அந்த வகையில் இந்த ஆண்டும் கார் சாகுபடி மேற்கொள்வதற்கு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.

குறிப்பாக வடகிழக்கு பருவமழை பொய்த்து போன காரணத்தினாலும், தென்மேற்கு பருவமழை கிடைக்க வேண்டிய நேரத்தில் உரிய மழை பொழிவு கிடைக்காத காரணத்தினாலும், அணைகளில் நீர் இருப்பு வெகு குறைவாகவே இருந்தது. எனினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மழை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 18ஆம் தேதி கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

70 அடிக்கும் மேலாக நீர்மட்டம் இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் அதனை நம்பியும், மழைப்பொழிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் போதிய மழை இல்லாததால் அணைகளுக்கான நீர் வரத்தும் வெகுவாக குறைந்து. அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக குறைய தொடங்கியது.

தற்போதைய நிலையில் 124 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் குறைந்தபட்சம் 64 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 414 கன அடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருப்பதன் காரணமாக, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையிலும், குறைந்த அளவான நீர் இருப்பாக 44 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

இதனால் எதிர்வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் கார் சாகுபடி விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், அதனை வேளாண் துறை அதிகாரிகள் மூலமாக விவசாயிகளுக்கு தெரிவித்து ஒத்துழைப்பு வழங்கும்படியும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாபநாசம் அணையில் இருந்து கடந்த மாதம் ஜூலை 18ஆம் தேதி கனடியன் கால்வாய், மேலழகியான் கால்வாய், கீழ அழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாக சுமார் 18,000 ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே மழைப்பொழிவு இல்லாததால் தற்போது விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மிக மிக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வினாடிக்கு சுமார் 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 60 கன அடி மட்டுமே விவசாய தேவைக்காக திறக்கப்படுகிறது. இதனால் தண்ணீரை நம்பி நடவுப் பணிகளை மேற்கொண்ட விவசாயிகள், கடும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, பத்தமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடவுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அணைக்கான நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள அதே வேளையில், தென் மாவட்டங்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த உடன் திருநெல்வேலி மாவட்டத்தின் வறட்சி நிலவரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

போதிய மழை இல்லாத காரணத்தால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடவு செய்யப்பட்ட நாற்றுகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயத்திற்கான இழப்பீடு நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பயன்பாட்டுக்கே வராத திட்டத்திற்கு வரி விதிக்கும் மாநகராட்சி... திணறும் திருப்பூர் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.