ETV Bharat / state

கரோனா காலத்திலும் கைவிடாத எம்ஜிஆர்

author img

By

Published : Apr 23, 2020, 1:12 PM IST

Updated : Apr 23, 2020, 3:11 PM IST

திருநெல்வேலி: ஆதரவற்றோர் சிறப்பு முகாமில் இருப்பவர்களுக்கு மனரீதியான சோர்வை போக்குவதற்காக எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது.

lock down Movie screening
MGR movie screening in Orphanage

கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்று சாலையோரங்களில் இருப்பவர்கள், உணவு கிடைக்காமல் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் ஒன்று சேர்த்து உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நெல்லை நகர் முழுவதும் சென்று சாலையில் ஆதரவற்று இருந்தவர்கள், வெளியூர் செல்ல முடியாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை நெல்லை டவுன் கல்லணை மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது

அவர்களுக்கு முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகம் தேவையான ஆடைகள் வழங்கியதோடு தினமும் உணவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 29 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் இவர்களுக்கு மனரீதியான சோர்வை போக்கும் புதிய முயற்சியாக எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது.

இதையும் படிங்க: மின்னணு குடும்ப அட்டை பெற போன் செய்தால் போதும்... தேனி ஆட்சியர் அறிவிப்பு!

கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்று சாலையோரங்களில் இருப்பவர்கள், உணவு கிடைக்காமல் இருப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் ஒன்று சேர்த்து உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நெல்லை நகர் முழுவதும் சென்று சாலையில் ஆதரவற்று இருந்தவர்கள், வெளியூர் செல்ல முடியாதவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை நெல்லை டவுன் கல்லணை மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது

அவர்களுக்கு முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகம் தேவையான ஆடைகள் வழங்கியதோடு தினமும் உணவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 29 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் இவர்களுக்கு மனரீதியான சோர்வை போக்கும் புதிய முயற்சியாக எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது.

இதையும் படிங்க: மின்னணு குடும்ப அட்டை பெற போன் செய்தால் போதும்... தேனி ஆட்சியர் அறிவிப்பு!

Last Updated : Apr 23, 2020, 3:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.