ETV Bharat / state

ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு: காங்கிரஸார் கைது!

author img

By

Published : Dec 8, 2020, 1:31 PM IST

திருநெல்வேலி: விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

protest
protest

வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று காங்கிரஸார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்கிரகுளம்-வண்ணாரப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று நடத்தினர். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறிக்கும் வகையில், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கேட்டிற்கு பூட்டு போட்டனர்.

ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு
ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்புக்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான காவலர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பாரத் பந்த் - காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு!

வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று காங்கிரஸார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொக்கிரகுளம்-வண்ணாரப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று நடத்தினர். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது குறிக்கும் வகையில், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நுழைவு வாயிலில் இருந்த இரும்பு கேட்டிற்கு பூட்டு போட்டனர்.

ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு
ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு பூட்டு

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்புக்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான காவலர்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பாரத் பந்த் - காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகள் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.