ETV Bharat / state

#VideoIn:அமைச்சரை  எதிர்த்த புதிய தமிழகம் கட்சியினர் - கடும்வாக்குவாதம்!

author img

By

Published : Oct 10, 2019, 7:45 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைப்பட்டியில் அதிமுக அமைச்சர் பரப்புரை செய்ய எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு கட்சிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

admk campaign

நாங்குநேரி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவிற்கு ஆதரவில்லை என தெரிவித்துள்ளார். எனினும், அதிமுகவின் பரப்புரை துண்டறிக்கையில் கிருஷ்ணசாமி படத்தைப் போட்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என பிரசாரம் செய்து வருகின்றனர். இது குறித்து புதிய தமிழகம் கட்சியினர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்துள்ளனர்.

இரு கட்சிகளிடையே வாக்குவாதம்

இந்நிலையில் அதிமுக அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் அதிமுக தொண்டர்களுடன் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைபட்டி வருகை தந்தார். பொதுமக்களுக்கு அவர் அளித்த பிரசார துண்டறிக்கையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி படத்தைப் பயன்படுத்தி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு கேட்பதற்கு அப்பகுதி மக்கள், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் தளவாய் பாண்டியன் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு இரு கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இதையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுகவினர் அவ்விடத்திலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க:நாங்குநேரி தொகுதியின் தற்போதைய நிலை என்ன?- ஓர் அலசல்!

நாங்குநேரி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவிற்கு ஆதரவில்லை என தெரிவித்துள்ளார். எனினும், அதிமுகவின் பரப்புரை துண்டறிக்கையில் கிருஷ்ணசாமி படத்தைப் போட்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என பிரசாரம் செய்து வருகின்றனர். இது குறித்து புதிய தமிழகம் கட்சியினர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்துள்ளனர்.

இரு கட்சிகளிடையே வாக்குவாதம்

இந்நிலையில் அதிமுக அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் அதிமுக தொண்டர்களுடன் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைபட்டி வருகை தந்தார். பொதுமக்களுக்கு அவர் அளித்த பிரசார துண்டறிக்கையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி படத்தைப் பயன்படுத்தி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு கேட்பதற்கு அப்பகுதி மக்கள், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் தளவாய் பாண்டியன் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு இரு கட்சியினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இதையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுகவினர் அவ்விடத்திலிருந்து வெளியேறினர்.

இதையும் படிங்க:நாங்குநேரி தொகுதியின் தற்போதைய நிலை என்ன?- ஓர் அலசல்!

Intro:நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைபட்டியில் அதிமுக அமைச்சர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு. இரு கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம்.Body:நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைபட்டியில் அதிமுக அமைச்சர் பிரசாரம் செய்வதற்கு எதிர்ப்பு. இரு கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம்.

நான்குநேரி இடைதேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவிற்கு ஆதரவில்லை என தெரிவித்துள்ளார். எனினும் அதிமுகவின் பிரசார நோட்டிஸில் கிருஷ்ணசாமி படத்தை போட்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு என பிரசாரம் செய்து வருகின்றனர்.

புதிய தமிழகம் கட்சியினர் இது குறித்து காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்னைர். இந்நிலையில் அதிமுக அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் அதிமுக தொண்டர்களுடன் நான்குநேரி தொகுதிக்குப் பட்ட மூலைக்கரைபட்டி வருகை தந்தார். பொது மக்களுக்கு அவர் அளித்த பிரசார நோட்டீசில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி படத்தை பயன்படுத்தி , அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓட்டு கேட்பதற்கு அப்பகுதி மக்கள் புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் தளவாய் பாண்டியன் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு இரு கட்சியினருக்குமிடையே சண்டை ஏற்பட கூடிய சூழ்நிலை உருவானது. இது குறித்து அறிந்த போலீசார் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இதையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுகவினர் அந்த இடத்திலிருந்து வெளியேறினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.