தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி. அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (27). இவர் நேற்று (ஜன.15) குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு ஆகியோருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று இரவு அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில் நவீன்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பிரபு, செல்வம் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் நவீன்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற நவீன்குமாரின் நண்பர்கள் ராஜா, ஜெகதீஸ் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரபு , செல்வம், நேசமணி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி பாலியல் வன்புணர்வு: நியாயமான விசாரணை கோரும் தேசிய மகளிர் ஆணையம்!