ETV Bharat / state

தேனி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 2:05 PM IST

Theni news: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

youth-killed-in-factional-clash-at-temple-festival-in-theni
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இளைஞர் பலி.. உறவினர்கள் சாலை மறியல்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களம் காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்ற இளைஞர், அருகே உள்ள சிந்துவம்பட்டி பகுதிக்குச் சென்ற போது, அதே சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டடுள்ளது.

இதனையடுத்து இருளப்பனை, சிந்தும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயாம் அடைந்த இருளப்பனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இருளப்பனின் உறவினர்கள், பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் அறிந்து அங்கு வந்த பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கீதா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரியகுளம் பகுதியில் இருந்து ஆண்டிபட்டி, குள்ளபுரம், தேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட இருளப்பணியில் உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்த 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களம் காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்ற இளைஞர், அருகே உள்ள சிந்துவம்பட்டி பகுதிக்குச் சென்ற போது, அதே சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டடுள்ளது.

இதனையடுத்து இருளப்பனை, சிந்தும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயாம் அடைந்த இருளப்பனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இருளப்பனின் உறவினர்கள், பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் அறிந்து அங்கு வந்த பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கீதா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரியகுளம் பகுதியில் இருந்து ஆண்டிபட்டி, குள்ளபுரம், தேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ், போராட்டத்தில் ஈடுபட்ட இருளப்பணியில் உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வந்த 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.