ETV Bharat / state

மழையால் நிரம்பும் வைகை அணை - வெள்ள அபாய எச்சரிக்கை - Vaigai dam water level

தேனி: தொடர்மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

vaigai dam
vaigai dam
author img

By

Published : Dec 4, 2019, 9:51 AM IST

வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும்.

நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து வைகை வடிகால் நிலப்பகுதி கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கரையோரம் உள்ள மக்களும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தினர்.

வைகை அணை

தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும் போது இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்படும்.

தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தாண்டில் முதன்முறையாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும்.

நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து வைகை வடிகால் நிலப்பகுதி கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கரையோரம் உள்ள மக்களும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தினர்.

வைகை அணை

தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும் போது இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்படும்.

தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தாண்டில் முதன்முறையாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro: 66அடியை எட்டியதால் வைகை அணையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
Body: வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டி உள்ளது. மொத்தக் கொள்ளளவு நீர்மட்டம் 71அடியாகும். இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 65.55அடியாக இருந் நிலையில் தற்போது 66.01அடியாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து வைகை வடிகால் நிலப்பகுதி கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும் போது 2வது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69அடியை எட்டியதும் முன்றாவது கட்ட வெற்ற அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்படும்.
Conclusion: தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழையால் நீர்வரத்து ஏற்பட்டு இவ்வாண்டு முதல் முறையாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.