ETV Bharat / state

காட்டுத் தீ: அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசம் - adukkam forest fire tamil news

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருக்கும் பல அரிய வகை மரங்கள், மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன.

theni rare herbs damage in adukkam forest fire
theni rare herbs damage in adukkam forest fire
author img

By

Published : Apr 25, 2020, 10:12 AM IST

தேனி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவை இடம் பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்நிலையில் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் நேற்று மாலை முதல் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது.

இதனால் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட வனத்தில் உள்ள பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின்றன. வன விலங்குகளும் தங்களின் வாழ்விடத்தை மாற்றி வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுக்கம் வனப்பகுதியில் காட்டுத் தீ

எனவே மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் காட்டுத் தீ விஷயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க... தீ பற்றி எரியும் செம்பேடு வனப்பகுதி - தீயை அணைக்க கோரிக்கை!

தேனி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனால் வனங்களின் வளம் அழிவதோடு, அங்கு வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்விடமும் பாதிக்கப்பட்டு அவை இடம் பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்நிலையில் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியுள்ள அடுக்கம் வனப்பகுதியில் நேற்று மாலை முதல் காட்டுத் தீ பற்றி எரிந்துவருகிறது.

இதனால் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட வனத்தில் உள்ள பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின்றன. வன விலங்குகளும் தங்களின் வாழ்விடத்தை மாற்றி வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுக்கம் வனப்பகுதியில் காட்டுத் தீ

எனவே மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் காட்டுத் தீ விஷயத்தில் அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க... தீ பற்றி எரியும் செம்பேடு வனப்பகுதி - தீயை அணைக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.