ETV Bharat / state

டம்டம் பாறை வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீ! - western ghats fire

தேனி: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள டம்டம் பாறை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது.

தேனி காட்டுத் தீ  டம்டம் பாறை வனப்பகுதியில் காட்டுத் தீ  theni forest fire  western ghats fire  theni periyakulam forest fire
டம்டம் பாறை வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீ
author img

By

Published : Jan 20, 2020, 9:23 AM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான டம்டம் பாறை வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருடந்தோறும் கோடைகாலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம்.

ஆனால், இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. மேலும், தற்போது குளிர்காலம் என்பதால் வழக்கத்தை விடப் பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், தற்போது பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

பற்றி எரியும் காட்டுத் தீ

மேலும், காட்டுத் தீ வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காடு வளர்ப்பு - மனித குலத்தின் வருங்காலத்துக்கு ஓர் உறுதியான காப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான டம்டம் பாறை வனப்பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருடந்தோறும் கோடைகாலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம்.

ஆனால், இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. மேலும், தற்போது குளிர்காலம் என்பதால் வழக்கத்தை விடப் பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், தற்போது பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன.

பற்றி எரியும் காட்டுத் தீ

மேலும், காட்டுத் தீ வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: காடு வளர்ப்பு - மனித குலத்தின் வருங்காலத்துக்கு ஓர் உறுதியான காப்பு

Intro: பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்;ச்சி மலை பகுதியில் பற்றி எறியும் காட்டுத் தீ. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளான டம்டம் பாறை வனப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருடந்தோரும் கோடைகாலங்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு ஜனவரி மாதமே காட்டுத் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது. மேலும் தற்போது குளிர் காலம் என்பதால் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் தற்போது பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயினால் விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் காட்டு தீயினால் எரிந்து சாம்பலாகி வருகின்றன. காட்டு தீயினால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூல்நிலை உருவாகி உள்ளது.
Conclusion: வனப்பகுதயில் தீயை யாரேனும் வைக்கிரார்களா? இல்லை இயற்கையாகவே தீ எறிகிறதா? என கண்டறிந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.