ETV Bharat / state

வாக்குச்சாவடியில் மோதல்: திமுக பிரமுகருக்கு மண்டை உடைப்பு - theni dmk member attack

தேனி: கோம்பைத் தொழு கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி அருகே அதிமுக, திமுக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திமுக பிரமுகரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் மண்டை உடைப்பு
திமுக பிரமுகர் மண்டை உடைப்பு
author img

By

Published : Dec 27, 2019, 8:20 PM IST

தேனி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் ஆண்டிபட்டி, கடமலை-மயிலை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மேகமலை ஊராட்சிக்குள்பட்ட கோம்பைத்தொழு கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக கட்சியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து திமுக கிளைச்செயலாளர் பெருமாள் (55) என்பவரை அதிமுக பிரமுகர் செல்லத்துரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மண்டை உடைந்து படுகாயமடைந்த பெருமாள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் கூடுதலாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாலாஜாவில் வாக்கு செலுத்திய அரியலூர் மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் ஆண்டிபட்டி, கடமலை-மயிலை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் நடைபெற்றது. இதில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மேகமலை ஊராட்சிக்குள்பட்ட கோம்பைத்தொழு கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி அருகில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக கட்சியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து திமுக கிளைச்செயலாளர் பெருமாள் (55) என்பவரை அதிமுக பிரமுகர் செல்லத்துரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மண்டை உடைந்து படுகாயமடைந்த பெருமாள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் கூடுதலாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வாலாஜாவில் வாக்கு செலுத்திய அரியலூர் மாவட்ட ஆட்சியர்

Intro:          வாக்குச்சாவடியில் மோதல். திமுக பிரமுகருக்கு மண்டை உடைப்பு.
Body:          தேனி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஆண்டிபட்டி மற்றும் கடமலை – மயிலை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் இரண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடமலை – மயிலை ஒன்றியத்தில் உள்ள மேகமலை ஊராட்சிக்குட்பட்ட கோம்பைத் தொழு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அருகாமையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக மற்றும் திமுக பிரமுகர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திமுக கிளைச் செயலர் பெருமாள்(55) என்பவரை அதிமுக பிரமுகர் செல்லத்துரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. மண்டை உடைந்து படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Conclusion: இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.